ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை!

Murugesan M by Murugesan M
Dec 1, 2023, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி-2023ல் வரலாற்று நிகழ்வாக ரூ.15.03 கோடி மதிப்பிலான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 2023 நவம்பர் 14 முதல் 27 வரை நடைபெற்ற 42-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி – 2023 ல் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பங்கேற்றது.

14 நாட்கள் நடைபெற்ற இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியில், கதர் ஆடை விரும்புவோர் அரங்கு எண் 3 -ல் அமைக்கப்பட்ட ‘கதர் அரங்கில்’ பெருமளவில் கொள்முதல் செய்தனர். கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்கள் இதுவரை இல்லாத வரலாற்று நிகழ்வாக ரூ.15.03 கோடி அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

2022-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை ரூ.12.06 கோடியாக இருந்தது, இது இந்த ஆண்டு 25 சதவீதம்  அதிகரித்து ரூ.15.03 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த அளவிற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ‘புதிய இந்தியாவின் புதிய கதர்’ தற்சார்பு இந்தியா இயக்கத்தை வழிநடத்துகிறது  என்பதைக் காட்டுகிறது என்று கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய தலைவர் மனோஜ் குமார் கூறினார். கதர் அரங்கிற்கு இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சிறப்பு பாராட்டுப் பதக்கத்தையும் விருதையும் வழங்கியது.

நவம்பர் 27 அன்று கதர் இந்தியா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நிறைவு விழாவில், இந்த ஆண்டு விற்பனையின் அடிப்படையில் பங்கேற்பாளர்களுக்கு முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளை குமார் வழங்கினார்.

4,408,870 மதிப்புள்ள கதர் பொருட்கள் விற்பனையான கர்நாடகத்தைச் சேர்ந்த டி.என்.ஆர் சில்க் கதர் முதல் பரிசைப் பெற்றது. 3,076,600 மதிப்புள்ள கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களை விற்பனை செய்த கர்நாடகாவின் நஸ்னீன் சில்க் கதர் இண்டஸ்ட்ரீஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கர்நாடகாவின் ஷிரின் பட்டு கதர் கிராமத் தொழில்கள் சங்கம் ரூ .2,253,570  விற்பனையுடன்  மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதவிர விற்பனை அடிப்படையில் 10 அரங்குகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Tags: In India International Trade Fair-2023
ShareTweetSendShare
Previous Post

புனே, ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வியில் மிக உயர்ந்த தரத்திலான நிறுவனமாக உள்ளது!

Next Post

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நீடிப்பாரா?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies