ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!
Jun 6, 2025, 06:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

Web Desk by Web Desk
Dec 2, 2023, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது போட்டி நேற்று ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். முதல் ஓவரில் இந்திய அணி தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக விளையாடியது.  சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 6 வது ஓவரில் 6 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 பந்துகளில் 37 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ரிங்கு சிங் நிதானமாக விளையாடி வந்தார். இவருடன் விளையாடி வந்த ருத்ராஜ் 28 பந்துகளில் 32 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா களமிறங்கினார். ஜித்தேஷ் மற்றும் ரிங்கு சிங் கூட்டணி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தது. இறுதியாக ஜித்தேஷ் சர்மா 1 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 19 பந்துகளில் 35 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ரிங்கு சிங் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 29 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பேன் ட்வர்ஷுய்ஸ் 3 விக்கெட்களும், ஜசோன் மற்றும் தன்வீர் தலா 2 விக்கெட்களும் ஆரோன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் ஜோஷ் களமிறங்கினர்.

4 வது ஓவரில் ஜோஷ் 8 ரன்களுக்கும் 5 வது ஓவரில் டிராவிஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஆரோன் 8 ரன்களுக்கும் டெர்மோட் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 36 ரன்களும், மேட் ஷாட் 22 ரன்களும் எடுத்தனர்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 154 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அக்சார் படேல் 3 விக்கெட்டும், தீபக் 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்களை வீழ்த்திய அக்சார் படேலுக்கு வழங்கப்பட்டது.

Tags: t20Raipuraustriliaindia wonindia won seiresIndia
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 66.74 அடியாக அதிகரிப்பு

Next Post

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

Related News

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies