கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனையான வைஷாலிக்கு தமிழக பாஜகு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
“இந்தியாவின் 84 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக செஸ் வீராங்கனை சகோதரிக்கு தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய அளவில் மூன்றாவதாகவும், தமிழக அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ள சகோதரி வைஷாலி உலக அரங்கில் மேன்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.