இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை

Web Desk by Web Desk
Dec 2, 2023, 08:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரஷ்ய – உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில், 1 இலட்சத்து 70 ஆயிரம் போர் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க, இரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால், ஆத்திரமடைந்த இரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. போரில் உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா கைப்பற்றியது. இரஷ்யா உக்ரைன் போர் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரஷ்யாவின் இராணுவ பலத்தை மேலும், 15 சதவீதம் அதிகரிக்க அனுமதி அளிக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், இரஷ்ய இராணுவத்தில், 1 இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் நாட்டின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும் என்று இரஷ் தரப்பில் கூறப்படுகிறது.

உக்ரைன் – இரஷ்ய போர் 21 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் இராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரஷ்ய இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது.
இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்திருக்கும் போதிலும், ஜூன் மாதம் மிகப் பெரிய எதிர் தாக்குதலை நடத்திய போதிலும், இரஷ்யாவிடம் இருந்து தன்னுடைய இழந்த பகுதிகளை உக்ரைனால் கைப்பற்ற முடியவில்லை.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி தீவிர தாக்குதல் நடத்த இரஷ்யா முயன்றது. இந்த வாரத் தொடக்கத்தில், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாட்டின் ஆறு இடங்களில், ஈரானில் தயாரிக்கப்பட்ட, 71 ஆளில்லா விமானங்களைக் கொண்டு இரஷ்யா தாக்குதல் நடத்த முயன்றது. இந்த ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கியதாக உக்ரைனிய விமானப்படை கூறியது.

Tags: russiaRussian president putin
ShareTweetSendShare
Previous Post

’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Next Post

அமலாக்கத்ததுறை அதிகாரி கைது ! – புகார் தந்தவர் பின்னணி என்ன ?

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies