இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை
Jun 15, 2026, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 2, 2023, 08:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரஷ்ய – உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில், 1 இலட்சத்து 70 ஆயிரம் போர் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க, இரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால், ஆத்திரமடைந்த இரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. போரில் உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா கைப்பற்றியது. இரஷ்யா உக்ரைன் போர் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரஷ்யாவின் இராணுவ பலத்தை மேலும், 15 சதவீதம் அதிகரிக்க அனுமதி அளிக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், இரஷ்ய இராணுவத்தில், 1 இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் நாட்டின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும் என்று இரஷ் தரப்பில் கூறப்படுகிறது.

உக்ரைன் – இரஷ்ய போர் 21 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் இராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரஷ்ய இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது.
இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்திருக்கும் போதிலும், ஜூன் மாதம் மிகப் பெரிய எதிர் தாக்குதலை நடத்திய போதிலும், இரஷ்யாவிடம் இருந்து தன்னுடைய இழந்த பகுதிகளை உக்ரைனால் கைப்பற்ற முடியவில்லை.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி தீவிர தாக்குதல் நடத்த இரஷ்யா முயன்றது. இந்த வாரத் தொடக்கத்தில், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாட்டின் ஆறு இடங்களில், ஈரானில் தயாரிக்கப்பட்ட, 71 ஆளில்லா விமானங்களைக் கொண்டு இரஷ்யா தாக்குதல் நடத்த முயன்றது. இந்த ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கியதாக உக்ரைனிய விமானப்படை கூறியது.

Tags: russiaRussian president putin
ShareTweetSendShare
Previous Post

’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Next Post

அமலாக்கத்ததுறை அதிகாரி கைது ! – புகார் தந்தவர் பின்னணி என்ன ?

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies