இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை
Sep 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரஷ்ய-உக்ரைன் போர்: புடின் அதிரடி நடவடிக்கை

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 2, 2023, 08:58 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரஷ்ய – உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில், 1 இலட்சத்து 70 ஆயிரம் போர் வீரர்களை இராணுவத்தில் சேர்க்க, இரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால், ஆத்திரமடைந்த இரஷ்யா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. போரில் உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா கைப்பற்றியது. இரஷ்யா உக்ரைன் போர் உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இரஷ்யாவின் இராணுவ பலத்தை மேலும், 15 சதவீதம் அதிகரிக்க அனுமதி அளிக்கும் ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், இரஷ்ய இராணுவத்தில், 1 இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நேட்டோவின் விரிவாக்கம் மற்றும் நாட்டின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உதவும் என்று இரஷ் தரப்பில் கூறப்படுகிறது.

உக்ரைன் – இரஷ்ய போர் 21 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் இராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரஷ்ய இராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது.
இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை வைத்திருக்கும் போதிலும், ஜூன் மாதம் மிகப் பெரிய எதிர் தாக்குதலை நடத்திய போதிலும், இரஷ்யாவிடம் இருந்து தன்னுடைய இழந்த பகுதிகளை உக்ரைனால் கைப்பற்ற முடியவில்லை.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ட்ரோன்களைப் பயன்படுத்தி தீவிர தாக்குதல் நடத்த இரஷ்யா முயன்றது. இந்த வாரத் தொடக்கத்தில், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாட்டின் ஆறு இடங்களில், ஈரானில் தயாரிக்கப்பட்ட, 71 ஆளில்லா விமானங்களைக் கொண்டு இரஷ்யா தாக்குதல் நடத்த முயன்றது. இந்த ஆளில்லா விமானங்களை இடைமறித்து தாக்கியதாக உக்ரைனிய விமானப்படை கூறியது.

Tags: Russian president putinrussia
Share
Tweet
SendShare
Previous Post

’மிக்ஜாம்’ புயல்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Next Post

அமலாக்கத்ததுறை அதிகாரி கைது ! – புகார் தந்தவர் பின்னணி என்ன ?

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies