இந்தியா. ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டி இன்று பெங்களூரில் நடைபெறுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 3 போட்டிகளும் ஆஸ்திரேலியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்றையப் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. என்னதான் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியிருந்தாலும் இந்தியா இப்போட்டியில் வெற்றி பெரும் எண்ணத்தில் தான் இருக்கும்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவை தோற்கடிக்கும் முனைப்பில் விளையாடும். எனவே இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் இப்போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய அணி 62% வெற்றி பெறும் என்றும் ஆஸ்திரேலியா அணி 38% வெற்றி பெறும் என்றும் இணையத்தில் பதிவிட்டுள்ளது.