ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!
Mar 15, 2026, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 3, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ககன்யான் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட விண்வெளி வீரா்கள் அனைவரும் பயிற்சி முடித்து தயாா் நிலையில் இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்திருக்கிறார்.

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி 3 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதாகும். இத்திட்டத்திற்காக 4 விண்வெளி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள பண்டித தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவா் சோமநாத், நிலவின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி சந்திரயான்-3 விண்கலம் வரலாற்றுச் சாதனை படைத்தது.  இதனை சாத்தியமாக்க இஸ்ரோ இரவு பகலாக தொழில்நுட்பங்களை உருவாக்கியது.

இனி வரும் காலங்களிலும் எண்ணற்ற தொழில்நுட்பங்களை இஸ்ரோ உருவாக்கும். சந்திரயான்-3 மூலம் கிடைத்த வெற்றி எங்களுக்கு மேலும் உத்வேகம் அளித்திருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும் அளவிற்கு இந்தியா தற்போது உயா்ந்திருக்கிறது.

அந்த வகையில், முதலில் விண்ணுக்கு ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி சோதனை நடத்தப்படவுள்ளன. இதன் பிறகு, விண்ணுக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி 4 விண்வெளி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா். இதற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு, அனைவரும் பயிற்சியை முடித்து விண்ணுக்குச் செல்ல தயாா் நிலையில் உள்ளனா்.

செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கும், செலுத்துவதற்கும் எண்ணற்ற தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2035-ல் இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி மையம் அமைக்கும் பிரதமரின் கனவை நனவாக்க இன்னும் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

நிலவுக்கு மீண்டும் செல்ல வேண்டும். வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள விண்கலங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமே வளமான எதிா்காலத்தை தீா்மானிக்கிறது. தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் மேம்படும் பொருளாதாரத்தால் நாம் உலகளவில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்க முடியும்” என்றாா்.

நிகழ்ச்சியில், தொழிலதிபரும் பல்கலைக்கழகத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி காணொலி வாயிலாக உரையாற்றினாா்.

Tags: ISROSomnathgaganyaan
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை மீது கால் வைத்தது குறித்து மிச்சேல் விளக்கம்!

Next Post

நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies