ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!
Jun 6, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!

Web Desk by Web Desk
Dec 3, 2023, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ககன்யான் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட விண்வெளி வீரா்கள் அனைவரும் பயிற்சி முடித்து தயாா் நிலையில் இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்திருக்கிறார்.

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்தின்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி 3 நாட்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதாகும். இத்திட்டத்திற்காக 4 விண்வெளி வீரா்கள் தோ்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகரிலுள்ள பண்டித தீனதயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவா் சோமநாத், நிலவின் தென்துருவத்துக்கு அருகே தரையிறங்கி சந்திரயான்-3 விண்கலம் வரலாற்றுச் சாதனை படைத்தது.  இதனை சாத்தியமாக்க இஸ்ரோ இரவு பகலாக தொழில்நுட்பங்களை உருவாக்கியது.

இனி வரும் காலங்களிலும் எண்ணற்ற தொழில்நுட்பங்களை இஸ்ரோ உருவாக்கும். சந்திரயான்-3 மூலம் கிடைத்த வெற்றி எங்களுக்கு மேலும் உத்வேகம் அளித்திருக்கிறது. விண்வெளி தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்தும் அளவிற்கு இந்தியா தற்போது உயா்ந்திருக்கிறது.

அந்த வகையில், முதலில் விண்ணுக்கு ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி சோதனை நடத்தப்படவுள்ளன. இதன் பிறகு, விண்ணுக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி 4 விண்வெளி வீரா்கள் அனுப்பப்பட உள்ளனா். இதற்காக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு, அனைவரும் பயிற்சியை முடித்து விண்ணுக்குச் செல்ல தயாா் நிலையில் உள்ளனா்.

செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் போன்றவற்றை தயாரிப்பதற்கும், செலுத்துவதற்கும் எண்ணற்ற தொழிற்சாலைகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. மாணவா்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2035-ல் இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி மையம் அமைக்கும் பிரதமரின் கனவை நனவாக்க இன்னும் எண்ணற்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

நிலவுக்கு மீண்டும் செல்ல வேண்டும். வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள விண்கலங்கள் அனுப்பப்பட வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமே வளமான எதிா்காலத்தை தீா்மானிக்கிறது. தொழில்நுட்பத்தின் வளா்ச்சியால் மேம்படும் பொருளாதாரத்தால் நாம் உலகளவில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுக்க முடியும்” என்றாா்.

நிகழ்ச்சியில், தொழிலதிபரும் பல்கலைக்கழகத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி காணொலி வாயிலாக உரையாற்றினாா்.

Tags: ISROSomnathgaganyaan
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை மீது கால் வைத்தது குறித்து மிச்சேல் விளக்கம்!

Next Post

நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

Related News

கர்நாடகா : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது!

வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

குமாரபாளையம் – மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

காசாவில் போர் நிறுத்த தீர்மானம் – அமெரிக்கா எதிர்ப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்!

ராஜஸ்தான் : ரூ.14.5 லட்சம் மதிப்பிலான மாலை கொள்ளை!

ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளனர் – இபிஎஸ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies