அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!
Sep 9, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிரித்திருக்கிறது.

இந்த சூழலில், 25,000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. இப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்.

இதையடுத்து, பேராசிரியர்களும், மாணவர்களும் அலறி அடித்துக் கொண்டு, அங்குமிங்கும் சிதறி ஓடி இருக்கிறார்கள். எனினும், இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்து விட்டனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தில் முற்றிலுமாக சேவை பாதிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் சூதாட்ட மையமும் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனே, நாங்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம்” என்றார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 25,000 மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், “நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, முதலில் 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டேன். அதன் பிறகு 2 முறை சத்தம் கேட்டது. பின்னர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால், போலீஸார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால், நாங்கள் அடித்தளத்திற்கு ஓடினோம். அங்கு நாங்கள் 20 நிமிடங்கள் பதுங்கி இருந்தோம். அந்த சமயத்தில் மழை வேறு பெய்து கொண்டிருந்தது” என்றார். லாஸ் வேகாஸில் கடந்த 2017-ம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: america3 deadUniversityGun Shoot
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! – அண்ணாமலை

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்! – தமிழக பாஜக

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies