அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!
Mar 15, 2026, 10:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிரித்திருக்கிறது.

இந்த சூழலில், 25,000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. இப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்.

இதையடுத்து, பேராசிரியர்களும், மாணவர்களும் அலறி அடித்துக் கொண்டு, அங்குமிங்கும் சிதறி ஓடி இருக்கிறார்கள். எனினும், இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்து விட்டனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தில் முற்றிலுமாக சேவை பாதிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் சூதாட்ட மையமும் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனே, நாங்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம்” என்றார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 25,000 மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், “நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, முதலில் 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டேன். அதன் பிறகு 2 முறை சத்தம் கேட்டது. பின்னர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால், போலீஸார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால், நாங்கள் அடித்தளத்திற்கு ஓடினோம். அங்கு நாங்கள் 20 நிமிடங்கள் பதுங்கி இருந்தோம். அந்த சமயத்தில் மழை வேறு பெய்து கொண்டிருந்தது” என்றார். லாஸ் வேகாஸில் கடந்த 2017-ம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: america3 deadUniversityGun Shoot
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! – அண்ணாமலை

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்! – தமிழக பாஜக

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies