அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!
Jul 29, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிரித்திருக்கிறது.

இந்த சூழலில், 25,000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. இப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்.

இதையடுத்து, பேராசிரியர்களும், மாணவர்களும் அலறி அடித்துக் கொண்டு, அங்குமிங்கும் சிதறி ஓடி இருக்கிறார்கள். எனினும், இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்து விட்டனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தில் முற்றிலுமாக சேவை பாதிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் சூதாட்ட மையமும் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனே, நாங்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம்” என்றார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 25,000 மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், “நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, முதலில் 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டேன். அதன் பிறகு 2 முறை சத்தம் கேட்டது. பின்னர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால், போலீஸார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால், நாங்கள் அடித்தளத்திற்கு ஓடினோம். அங்கு நாங்கள் 20 நிமிடங்கள் பதுங்கி இருந்தோம். அந்த சமயத்தில் மழை வேறு பெய்து கொண்டிருந்தது” என்றார். லாஸ் வேகாஸில் கடந்த 2017-ம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: america3 deadUniversityGun Shoot
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! – அண்ணாமலை

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்! – தமிழக பாஜக

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies