அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!
Sep 13, 2026, 12:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிரித்திருக்கிறது.

இந்த சூழலில், 25,000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. இப்பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கிறார்.

இதையடுத்து, பேராசிரியர்களும், மாணவர்களும் அலறி அடித்துக் கொண்டு, அங்குமிங்கும் சிதறி ஓடி இருக்கிறார்கள். எனினும், இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்து விட்டனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் அருகிலுள்ள விமான நிலையத்தில் முற்றிலுமாக சேவை பாதிக்கப்பட்டது.

இப்பல்கலைக்கழகத்தின் அருகில்தான் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் சூதாட்ட மையமும் அமைந்திருக்கிறது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் மூட உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், “திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. உடனே, நாங்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினோம்” என்றார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 25,000 மாணவர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், “நான் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, முதலில் 3 முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்டேன். அதன் பிறகு 2 முறை சத்தம் கேட்டது. பின்னர், போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால், போலீஸார் வந்த பிறகும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால், நாங்கள் அடித்தளத்திற்கு ஓடினோம். அங்கு நாங்கள் 20 நிமிடங்கள் பதுங்கி இருந்தோம். அந்த சமயத்தில் மழை வேறு பெய்து கொண்டிருந்தது” என்றார். லாஸ் வேகாஸில் கடந்த 2017-ம் ஆண்டு இசை நிகழ்ச்சியின்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: america3 deadUniversityGun Shoot
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்திற்கு மத்திய அரசு எப்போதும் துணை நிற்கிறது! – அண்ணாமலை

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்! – தமிழக பாஜக

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies