குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!
Jul 29, 2025, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன். சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்ற இவர், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவார்.

சமீபத்தில் இவர் ஏர் இந்தியா விமானத்துக்கு எதிராக அச்சுறுத்தல் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்ல சதி நடந்ததாகவும், அந்த சதியை முறியடித்து விட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எஃப்.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து தங்களது கவலையை இந்தியாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்திய தரப்பில் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இந்த வருகையின்போது கிறிஸ்டோபர் ஏ வ்ரே, காலிஸ்தான் தீவிரவாதம், குண்டர்களுடனான தொடர்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் தீவிரவாதம் ஆகிய 3 முக்கியமான பிரச்சனைகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தலைவர் தினகர் குப்தாவுடன் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆண்டுகளில் எஃப்.பி.ஐ. இயக்குநரின் முதல் வருகை இதுவாகும். அதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு எஃப்.பி.ஐ. இயக்குனராக கிறிஸ்டோபர் ரே பதவியேற்ற பிறகு முதல் இந்தியா விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இப்பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: IndiafbiamericaKhalistan teerorist
ShareTweetSendShare
Previous Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Next Post

பப்புவா நியூ கினயாவில் எரிமலை வெடிப்பு: உதவிகரம் நீட்டிய இந்தியா!

Related News

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

சேலம் : சேதமடைந்து காணப்படும் பள்ளி வகுப்பறைகள் – சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies