குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!
Mar 15, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன். சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்ற இவர், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவார்.

சமீபத்தில் இவர் ஏர் இந்தியா விமானத்துக்கு எதிராக அச்சுறுத்தல் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்ல சதி நடந்ததாகவும், அந்த சதியை முறியடித்து விட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எஃப்.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து தங்களது கவலையை இந்தியாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்திய தரப்பில் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இந்த வருகையின்போது கிறிஸ்டோபர் ஏ வ்ரே, காலிஸ்தான் தீவிரவாதம், குண்டர்களுடனான தொடர்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் தீவிரவாதம் ஆகிய 3 முக்கியமான பிரச்சனைகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தலைவர் தினகர் குப்தாவுடன் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆண்டுகளில் எஃப்.பி.ஐ. இயக்குநரின் முதல் வருகை இதுவாகும். அதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு எஃப்.பி.ஐ. இயக்குனராக கிறிஸ்டோபர் ரே பதவியேற்ற பிறகு முதல் இந்தியா விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இப்பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: IndiafbiamericaKhalistan teerorist
ShareTweetSendShare
Previous Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Next Post

பப்புவா நியூ கினயாவில் எரிமலை வெடிப்பு: உதவிகரம் நீட்டிய இந்தியா!

Related News

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies