குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!
Sep 13, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 06:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன். சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்ற இவர், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவார்.

சமீபத்தில் இவர் ஏர் இந்தியா விமானத்துக்கு எதிராக அச்சுறுத்தல் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்ல சதி நடந்ததாகவும், அந்த சதியை முறியடித்து விட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எஃப்.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து தங்களது கவலையை இந்தியாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்திய தரப்பில் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இந்த வருகையின்போது கிறிஸ்டோபர் ஏ வ்ரே, காலிஸ்தான் தீவிரவாதம், குண்டர்களுடனான தொடர்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் தீவிரவாதம் ஆகிய 3 முக்கியமான பிரச்சனைகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தலைவர் தினகர் குப்தாவுடன் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆண்டுகளில் எஃப்.பி.ஐ. இயக்குநரின் முதல் வருகை இதுவாகும். அதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு எஃப்.பி.ஐ. இயக்குனராக கிறிஸ்டோபர் ரே பதவியேற்ற பிறகு முதல் இந்தியா விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இப்பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: IndiafbiamericaKhalistan teerorist
Share
Tweet
SendShare
Previous Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Next Post

பப்புவா நியூ கினயாவில் எரிமலை வெடிப்பு: உதவிகரம் நீட்டிய இந்தியா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies