குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!
Jun 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குர்பத்வந்த் கொலை முயற்சி விவகாரம்: எஃப்.பி.ஐ. இயக்குனர் 11-ம் தேதி இந்தியா வருகை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 7, 2023, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவர் குர்பத்வந்த் சிங் பண்ணுன். சீக்கியர்களுக்கான நீதி என்கிற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமை பெற்ற இவர், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது மிரட்டல் வீடியோக்களை வெளியிடுவார்.

சமீபத்தில் இவர் ஏர் இந்தியா விமானத்துக்கு எதிராக அச்சுறுத்தல் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொல்ல சதி நடந்ததாகவும், அந்த சதியை முறியடித்து விட்டதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எஃப்.பி.ஐ. அதிகாரிகள் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து தங்களது கவலையை இந்தியாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து, இந்திய தரப்பில் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீண்டும் ஒரு மிரட்டல் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் கொலை முயற்சி விவகாரம் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ.) இயக்குனர் கிறிஸ்டோபர் ஏ வ்ரே, வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இந்த வருகையின்போது கிறிஸ்டோபர் ஏ வ்ரே, காலிஸ்தான் தீவிரவாதம், குண்டர்களுடனான தொடர்பு மற்றும் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் தீவிரவாதம் ஆகிய 3 முக்கியமான பிரச்சனைகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தலைவர் தினகர் குப்தாவுடன் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆண்டுகளில் எஃப்.பி.ஐ. இயக்குநரின் முதல் வருகை இதுவாகும். அதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு எஃப்.பி.ஐ. இயக்குனராக கிறிஸ்டோபர் ரே பதவியேற்ற பிறகு முதல் இந்தியா விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, இப்பயணம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: IndiafbiamericaKhalistan teerorist
ShareTweetSendShare
Previous Post

எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் – நிஜ நிலவரம்!

Next Post

பப்புவா நியூ கினயாவில் எரிமலை வெடிப்பு: உதவிகரம் நீட்டிய இந்தியா!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies