370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
Jul 26, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியதைத் தொடர்ந்து, அம்மாநிலத்துக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

ஆனால், மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய வழக்கு விசாரணை 16 நாட்கள் நடைபெற்றது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர்.

அதேபோல, அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதில் எந்தத் தவறும் இழைக்கப்படவில்லை என்று மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாங்களை முன்வைத்தனர்.

இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி அறிவித்திருந்தது. இதனிடையே, ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு மசோதா 2023, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2023 ஆகிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி இருக்கிறது.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்க இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடர்பான இரு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், இத்தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: supreme courtjammu kashmirArticle 370
ShareTweetSendShare
Previous Post

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்!

Next Post

கர்நாடகாவில் திடீர் நிலநடுக்கம்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies