கேரள குண்டுவெடிப்பு: மேலும் ஒரு மூதாட்டி பலி!
Jul 24, 2025, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டுவெடிப்பு: மேலும் ஒரு மூதாட்டி பலி!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையின் மாநாடு நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளான 29-ம் தேதி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயரிழந்தனர். இதில், 12 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். அதோடு, தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த சூழலில், லில்லி ஜான் என்கிற மூதாட்டி நேற்று இரவு உயிரிழந்தார்.

தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி ஜான் என்பவரின் மனைவி லில்லி. 71 வயதான இவர், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். யெகோவாவின் சாட்சிகள் சபையின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.

குண்டுவெடிப்பில் லில்லியும், அவரது கணவர் ஜானும் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் இறந்துவிட்டார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த லில்லியும் நேற்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார்.

இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இக்குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: KeralaBomb blastDeadOld lady
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் ஆதரவாளருக்கு 11 ஆண்டுகள் சிறை!

Next Post

வனாடு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies