கேரள குண்டுவெடிப்பு: மேலும் ஒரு மூதாட்டி பலி!
Jul 29, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டுவெடிப்பு: மேலும் ஒரு மூதாட்டி பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையின் மாநாடு நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளான 29-ம் தேதி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயரிழந்தனர். இதில், 12 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். அதோடு, தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த சூழலில், லில்லி ஜான் என்கிற மூதாட்டி நேற்று இரவு உயிரிழந்தார்.

தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி ஜான் என்பவரின் மனைவி லில்லி. 71 வயதான இவர், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். யெகோவாவின் சாட்சிகள் சபையின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.

குண்டுவெடிப்பில் லில்லியும், அவரது கணவர் ஜானும் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் இறந்துவிட்டார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த லில்லியும் நேற்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார்.

இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இக்குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: KeralaBomb blastDeadOld lady
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் ஆதரவாளருக்கு 11 ஆண்டுகள் சிறை!

Next Post

வனாடு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies