கேரள குண்டுவெடிப்பு: மேலும் ஒரு மூதாட்டி பலி!
Apr 29, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள குண்டுவெடிப்பு: மேலும் ஒரு மூதாட்டி பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் கிறிஸ்தவ மத பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருக்கிறது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள களமச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை யொகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையின் மாநாடு நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளான 29-ம் தேதி நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அப்போது, பிரார்த்தனைக் கூட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 6 பேர் உயரிழந்தனர். இதில், 12 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். அதோடு, தாய், மகன், மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்த சூழலில், லில்லி ஜான் என்கிற மூதாட்டி நேற்று இரவு உயிரிழந்தார்.

தொடுபுழா அருகே உள்ள கொடிக்குளம் வண்டமட்டம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி ஜான் என்பவரின் மனைவி லில்லி. 71 வயதான இவர், கூட்டுறவு வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். யெகோவாவின் சாட்சிகள் சபையின் பிரார்த்தனை கூட்டத்தில் தனது கணவர் ஜானுடன் பங்கேற்றார்.

குண்டுவெடிப்பில் லில்லியும், அவரது கணவர் ஜானும் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜான் இறந்துவிட்டார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த லில்லியும் நேற்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார்.

இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர், யொகோவாவின் சாட்சிகள் சபையின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இக்குண்டுவெடிப்பு சதியில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறதா? என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags: DeadOld ladyKeralaBomb blast
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் ஆதரவாளருக்கு 11 ஆண்டுகள் சிறை!

Next Post

வனாடு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவு!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies