காசி தமிழ்ச் சங்கமம் 2: டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம்!
Oct 26, 2025, 04:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காசி தமிழ்ச் சங்கமம் 2: டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடி வாரணாசி பயணம்!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் 17, 18-ம் தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாராணசிக்குச் செல்லவிருக்கிறார்.

கலாச்சார மையங்களாகத் திகழும் வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தனர். அப்போது, வாரணாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மிகச்சிறந்த அனுபவங்களை பெற்றனர்.

இந்த நிலையில், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்ட நிகழ்வை மார்கழி மாதத்தின் முதல்நாளான வருகிற டிசம்பர் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்தி மோடி வாரணாசிக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கட்டிங் மெமோரியல் இன்டர் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விக்ஷித் பாரத் சங்கல்ப யாத்திரை கண்காட்சியைப் பார்வையிடுகிறார்.

பிறகு, டிசம்பர் 17-ம் தேதி தொடங்கும் காசி தமிழ்ச் சங்கமம் 2-வது கட்டத்தின் ஒரு பகுதியாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற உள்ள நமோ காட் பகுதிக்குச் செல்கிறார். டிசம்பர் 18-ம் தேதி வாராணசியில் உள்ள ஸ்வர்வேட் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து, தனது நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அனேகமாக வாரணாசியில் உள்ள சேவாபுரி பகுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க காசி பகுதி பா.ஜ.க. தயாராகி வருகிறது.

Tags: PM Modikasi tamil sangamam
ShareTweetSendShare
Previous Post

நாளை மத்திய இணை அமைச்சர்  ராஜீவ் சந்திரசேகர் சென்னை வருகை! – அண்ணாமலை

Next Post

U -19 ஆசிய கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies