43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!
Jul 26, 2025, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்பெயினில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஹம்சா சலீம் தார் என்ற வீரர் 43 பந்துகளில் 193 ரன்களை விளாசியுள்ளார்.

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் என்றே சொல்லலாம் அந்த   அளவிற்கு கிரிக்கெட் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரிக்கெட் பல வடிவில் நடத்தப்படுவதுண்டு. அதில் டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து தற்போது டி10 கிரிக்கெட் போட்டிகளும் ஒரு சில நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அண்மை காலங்களில் டி20 கிரிக்கெட்டை விடவும் டி10 கிரிக்கெட் போட்டிகள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகளவில் நடைபெற்று வருகிறது.  ஜிம்பாப்வே நாட்டில் டி10 லீக் தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஸ்பெயினில் நடைபெற்ற டி10 லீக் போட்டியில் அசாத்திய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா டி10 லீக் தொடரில் கேட்டலூன்யா ஜாக்குவார் அணியை  எதிர்த்து சோஹல் ஹாஸ்பிடலேட் அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த கேட்டலூன்யா ஜாக்குவார் அணியின் தொடக்க வீரர்களாக  ஹம்சா சலீம் தார் – யாசிர் அலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியில் பொளந்து கட்டிய ஹம்சா சலீம், வெறும் 24 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதன்பின் ஒவ்வொரு ஓவரிலும் அனைத்து பந்துகளையும் சிக்சர், பவுண்டரி என்று விளாசி தள்ளினார்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஹம்சா சலீம் 43 பந்துகளில் 22 சிக்ஸர், 14 பவுண்டரிகள் உட்பட 193 ரன்களை விளாசினார். டி10 கிரிக்கெட் லீக்கில் விளாசப்பட்ட அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் இதுதான். பவுண்டரி மற்றும் சிக்சர் மூலமாக மட்டுமே 188 ரன்களை அவர் விளாசியுள்ளார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 448.84ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக கேட்டலூன்யா ஜாக்குவார் அணி 10 ஓவர்களில் 257 ரன்களை குவித்தது. இதில் சோஹல் ஹாஸ்பிடலேட் அணி தரப்பில் முகமது வாரிஸ் என்ற வீரர் வீசிய 2 ஓவர்களில் 73 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் களமிறங்கிய சோஹல் ஹாஸ்பிடலேட் அணி  10 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் கேட்டலூன்யா ஜாக்குவார் அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் ஹம்சா சலீம் விளையாடிய  ஆட்டத்தின் வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

ஐரோப்பா டி10 லீக் தொடரில் 3 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ள 2வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: CricketspainCentuaryworld recordT10193 runs in 43 balls
ShareTweetSendShare
Previous Post

மக்களிடம் திருடப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வந்து சேரும்: பிரதமர் மோடி!

Next Post

இந்த மாத்திரைகளை பயன்படுத்தினால்… மத்திய அரசு எச்சரிக்கை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies