கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!
Jul 26, 2025, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 08:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்களை இந்தியத் தூதர் சந்தித்ததாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளை செய்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “இந்தியாவில் கிரிமினல் மற்றும் தீவிரவாதம் செய்துவிட்டு வெளிநாட்டில் தப்பிச் சென்றவர்கள், இந்திய சட்ட திட்டங்களின்படி சட்ட அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு பி.எஸ்.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீதான தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அட்னான் அகமது சமீபத்தில் பாகிஸ்தானின் கராச்சியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது. வரும் 13-ம் தேதி அல்லது அதற்கு முன்பு நாடாளுமன்றத்தை தாக்கப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறோம்.

மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கவோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ விரும்பவில்லை. இந்த விஷயத்தை அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறோம்.

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக இதுவரை 2 விசாரணைகள் நடந்திருக்கிறது. அவர்களது குடும்பத்தினர் மூலம் மேல்முறையீடு செய்தோம். இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்கி வருகிறோம்.

இதற்கிடையே, சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க டிசம்பர் 3-ம் தேதி எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. ஆகவே, சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம். நாங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம்” என்றார்.

Tags: Arindam pakshiQuatarIndian officers
ShareTweetSendShare
Previous Post

வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை பார்வையிடுகிறார்!

Next Post

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies