கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!
Jul 29, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 8, 2023, 08:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்களை இந்தியத் தூதர் சந்தித்ததாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளை செய்து வருவதாகவும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி கூறியிருக்கிறார்.

மத்திய அரசின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி வாராந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “இந்தியாவில் கிரிமினல் மற்றும் தீவிரவாதம் செய்துவிட்டு வெளிநாட்டில் தப்பிச் சென்றவர்கள், இந்திய சட்ட திட்டங்களின்படி சட்ட அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 2015-ம் ஆண்டு பி.எஸ்.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீதான தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அட்னான் அகமது சமீபத்தில் பாகிஸ்தானின் கராச்சியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க முடியாது. வரும் 13-ம் தேதி அல்லது அதற்கு முன்பு நாடாளுமன்றத்தை தாக்கப் போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பண்ணுன் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறோம்.

மிரட்டல் விடுக்கும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கவோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவோ விரும்பவில்லை. இந்த விஷயத்தை அமெரிக்கா, கனடா அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறோம்.

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக இதுவரை 2 விசாரணைகள் நடந்திருக்கிறது. அவர்களது குடும்பத்தினர் மூலம் மேல்முறையீடு செய்தோம். இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்கி வருகிறோம்.

இதற்கிடையே, சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க டிசம்பர் 3-ம் தேதி எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சனை. ஆகவே, சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம். நாங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம்” என்றார்.

Tags: Arindam pakshiQuatarIndian officers
ShareTweetSendShare
Previous Post

வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நாளை பார்வையிடுகிறார்!

Next Post

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies