கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!
Oct 29, 2025, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!

Web Desk by Web Desk
Dec 8, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இன்று அவசர நிலை ஒத்திகை நடைப்பெற்றது.

அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் உள்ளன.

இந்த மையம் அவசர கால தயார் நிலை திட்டத்தின்படி, வளாகத்தில் அவசர நிலை ஒத்திகையை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது. அந்த ஒத்திகை இன்று நடைபெற்றது.

பல பாதுகாப்பு அடுக்குகள் கொண்ட சென்னை அணுமின் நிலைய அணு உலையில் இம்மாதிரியான விபத்து நடக்க சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்றாலும், நிலையத்தின் அவசர நிலை தயார்நிலை செயல்பாட்டை சோதிப்பதே இத்தகைய ஒத்திகைகளின் முக்கிய நோக்கமாகும்.

கல்பாக்கம் வளாக அவசர நிலை நிர்வாகக் குழுவின் தலைவரான, சென்னை அணு மின் நிலைய இயக்குனர்  சுதிர் பி ஷெல்கே இந்த ஒத்திகையை முன்னின்று நடத்தினார்.

இந்த ஒத்திகை அணுசக்தி துறை மையத்தின் அவசரநிலை திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி செயல்படுத்தப்பட்டது. இதன்படி, கீழ்க்கண்ட ஒத்திகைகள் நடைபெற்றன.

நிலைய ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் இருக்க செய்தல். காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை தரும் ஒத்திகை இனிப்பு மிட்டாய் வழங்குதல் (அயோடின் மாத்திரைகளுக்கான ஒத்திகை). அத்தியாவசிய ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களை வளாகத்தில் இருந்து வெளியேற்றி நகரியத்தில் சேர்த்தல். கதிர்வீச்சு மாசுபட்ட வண்டியை சுத்தம் செய்யும் ஒத்திகை.

கல்பாக்கம் அணுசக்தி மையப் பிரிவுகளின் இயக்குனர்கள் மற்றும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) பார்வையாளர்கள் இந்த ஒத்திகையை கண்காணித்தனர்.

வளாகத்தை சேர்ந்த 7500 பேர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். ஒத்திகையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். இந்த வெளியேற்றம் 1½ மணி நேரத்தில் நடந்தேறியது. முழு ஒத்திகையும் 2½ மணி நேரத்தில் நிகழ்த்தி முடிக்கப்பட்டது.  இந்த ஒத்திகை எந்தவித முன்னறிவிப்பின்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Emergency drill at Kalpakkam nuclear power plant!
ShareTweetSendShare
Previous Post

கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!

Next Post

மாநில பேரிடர் நிவாரண நிதியில் என்ன செய்யலாம் – நாராயணன் திருப்பதி வெளியிட்ட தகவல்

Related News

பகலில் டேப்டாப் : இரவில் ஸ்டியரிங் வீல் – தனிமையை போக்க புதிய வழி தேடும் மென்பொறியாளர்கள்!

திருமண மோசடி புகார் – மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் ஆஜர்!

இந்திய நீதித்துறையின் மந்தநிலை பொருளாதார வளர்ச்சிக்கு தடையா? : அமெரிக்க ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை சொல்வது என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஞான பாரதம் திட்டத்தின் கீழ் பழமையான ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடக்கம்!

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies