கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!
Jan 14, 2026, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர கால ஒத்திகை!

Murugesan M by Murugesan M
Dec 8, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இன்று அவசர நிலை ஒத்திகை நடைப்பெற்றது.

அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் உள்ளன.

இந்த மையம் அவசர கால தயார் நிலை திட்டத்தின்படி, வளாகத்தில் அவசர நிலை ஒத்திகையை ஆண்டுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது. அந்த ஒத்திகை இன்று நடைபெற்றது.

பல பாதுகாப்பு அடுக்குகள் கொண்ட சென்னை அணுமின் நிலைய அணு உலையில் இம்மாதிரியான விபத்து நடக்க சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்றாலும், நிலையத்தின் அவசர நிலை தயார்நிலை செயல்பாட்டை சோதிப்பதே இத்தகைய ஒத்திகைகளின் முக்கிய நோக்கமாகும்.

கல்பாக்கம் வளாக அவசர நிலை நிர்வாகக் குழுவின் தலைவரான, சென்னை அணு மின் நிலைய இயக்குனர்  சுதிர் பி ஷெல்கே இந்த ஒத்திகையை முன்னின்று நடத்தினார்.

இந்த ஒத்திகை அணுசக்தி துறை மையத்தின் அவசரநிலை திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி செயல்படுத்தப்பட்டது. இதன்படி, கீழ்க்கண்ட ஒத்திகைகள் நடைபெற்றன.

நிலைய ஊழியர்களை பாதுகாப்பான கட்டிடங்களில் இருக்க செய்தல். காயமடைந்த ஊழியர்களுக்கு சிகிச்சை தரும் ஒத்திகை இனிப்பு மிட்டாய் வழங்குதல் (அயோடின் மாத்திரைகளுக்கான ஒத்திகை). அத்தியாவசிய ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களை வளாகத்தில் இருந்து வெளியேற்றி நகரியத்தில் சேர்த்தல். கதிர்வீச்சு மாசுபட்ட வண்டியை சுத்தம் செய்யும் ஒத்திகை.

கல்பாக்கம் அணுசக்தி மையப் பிரிவுகளின் இயக்குனர்கள் மற்றும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) பார்வையாளர்கள் இந்த ஒத்திகையை கண்காணித்தனர்.

வளாகத்தை சேர்ந்த 7500 பேர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். ஒத்திகையின் ஒரு பகுதியாக ஊழியர்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். இந்த வெளியேற்றம் 1½ மணி நேரத்தில் நடந்தேறியது. முழு ஒத்திகையும் 2½ மணி நேரத்தில் நிகழ்த்தி முடிக்கப்பட்டது.  இந்த ஒத்திகை எந்தவித முன்னறிவிப்பின்றி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Emergency drill at Kalpakkam nuclear power plant!
ShareTweetSendShare
Previous Post

கத்தார் சிறையில் கடற்படை வீரர்களை சந்தித்த இந்திய தூதர்: அரிந்தம் பாக்ஸி தகவல்!

Next Post

மாநில பேரிடர் நிவாரண நிதியில் என்ன செய்யலாம் – நாராயணன் திருப்பதி வெளியிட்ட தகவல்

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies