புனே மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி, 8 பேர் காயம்!
Sep 9, 2025, 05:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புனே மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி, 8 பேர் காயம்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் ஸ்பார்க்கிளிங் வகை மெழுகுவர்த்திகள் அதிகளவில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த கோர விபத்தில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சி ஆணையர் சேகர் சிங் கூறுகையில், “தலவாடேயில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தீயணைப்புப் படைக்கு அழைப்பு வந்தது. விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர் பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இத்தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும், காயமடைந்த 8 பேர் புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.

Tags: puneFireCandle factory
ShareTweetSendShare
Previous Post

உலகின் பிரபலமான தலைவர்கள்: முதலிடத்தில் பிரதமர் மோடி!

Next Post

U – 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் பேட்டிங்!

Related News

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies