விலை உயர்வு எதிரொலி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!
Jul 26, 2025, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விலை உயர்வு எதிரொலி: வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உள்நாட்டுச் சந்தைகளில் வெங்காயம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும், விலையைக் கட்டுப்படுத்தவும் 2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால், சாதாரண மக்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். ஆகவே, நுகர்வோரின் சிரமத்தைப் போக்கும் வகையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை டிசம்பர் 31-ம் தேதி வரை 40 சதவீதமாக நிர்ணயம் செய்தது. இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது, மத்திய அரசு மத்திய இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவித்து கிலோ 25 ரூபாய்க்கு சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்க வழிவகை செய்தது.

அதோடு, ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் விதமாக அக்டோபர் 28 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன் ஒன்றுக்கு 66,700 ரூபாயாக மத்திய அரசு நிா்ணயம் செய்தது. இந்த சூழலில், வெங்காயத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் டெல்லியில் 1 கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய்வரை விற்பனை செய்யப்படுகிறது.

அகில இந்திய அளவில் வெங்காயத்தின் சராசரி விலை கடந்த வியாழக்கிழமை கிலோ 57.11 ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டு காலத்தை ஒப்பிடுகையில் 97.95% அதிகமாகும். ஆகவே, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார். இந்தத் தடை நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

அதன்படி, இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பெறப்பட்ட ஆர்டர்கள், கப்பலில் ஏற்றப்படும் வெங்காயங்கள், சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட வெங்காயங்கள் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான கெடு அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

அதேசமயம், பிற நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு வழங்கும் அனுமதியின் அடிப்படையில், வெங்காயம் ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, சர்க்கரை ஆலைகள், கரும்புச் சாற்றை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில், வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகளுக்கே பெரும்பாலான வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tags: OnionExportINdia banned
ShareTweetSendShare
Previous Post

ஏழைகளின் நலன் காக்கும் அரசாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு திகழ்கிறது!

Next Post

திருநெல்வேலியில் கனமழை: வாகன ஓட்டிகள் அவதி!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies