பேக்கேஜிங்கில் சணல் கட்டாயப் பயன்பாடு: முன்பதிவு விதிமுறைகளுக்கு அரசு ஒப்புதல்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேக்கேஜிங்கில் சணல் கட்டாயப் பயன்பாடு: முன்பதிவு விதிமுறைகளுக்கு அரசு ஒப்புதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால், உணவு தானியங்களை 100 சதவிகிதம் சணல் சாக்குகளில்தான் பேக்கேஜிங் செய்ய வேண்டும்.

இந்தியாவில் சணல் பயிர் உற்பத்தியில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள சணல் தொழிற்சாலைகளில் 75 சதவீதம் மேற்கு வங்கத்தில்தான் உள்ளன. மத்திய அரசு பொது வினியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களின் விநியோகத்திற்கு சணல் பைகளை பயன்படுத்துமாறு தேசிய உணவு கழகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.

இதன்படி, உணவுக் கழகமும், இதர மாநில முகமை அமைப்புகளும், உணவு தானியங்களை சணல் பைகளில் அடைத்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வருகின்றன. இதற்காக, கரீப் மற்றும் ரபி பருவங்களில் சணல் பைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சணல் துறை ஆண்டுக்கு 15 லட்சம் டன் சணல் பைகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இதில், சுமார் 35 – 40 சதவீதம், அதாவது 8 லட்சம் டன் சணல் பைகளை, தேசிய உணவுக் கழகம் கொள்முதல் செய்கிறது. இந்த சணல் பைகள், பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிஸா மற்றும் பீகார் மாநிலங்களின் உணவு தானியக் கொள்முதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இதர மாநில முகமை அமைப்புகளும் சணல் பைகளை கொள்முதல் செய்கின்றன.

ஆனால், சணல் பைகள் அதிக விலை கொண்டதாக இருப்பதால், முகமை அமைப்புகள் சணல் சாக்குகளை கொள்முதல் செய்யாமல் பாலிதீன் சாக்குகளை கொள்முதல் செய்து வருகின்றன. இதனால், சணல் தொழில் நசிந்து வருவதோடு, அத்துறை 1,000 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், 2023- 24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளை அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, உணவு தானியங்களை 100 சதவீதமும், சர்க்கரையை 20 சதவீதமும் கட்டாயமாக சணல் பைகளில் பேக் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, தற்போதைய முன்மொழிவில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகள், இந்தியாவில் உள்ள சணல் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியின் நலனை பாதுகாக்கும். மேலும், இதன் மூலம் ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் தன்னிறைவு பெறும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சணல் பேக்கேஜிங் பொருட்கள் (பேக்கிங் பொருட்களில் கட்டாய பயன்பாடு) ஜே.பி.எம். சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம், சணல் ஆலைகள் மற்றும் துணை அலகுகளில் பணிபுரியும் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதோடு, சுமார் 40 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கும்.

இது தவிர, சணல் இயற்கையானது, மக்கக்கூடியது, புதுப்பிக்கத்தக்கது மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நார்ச்சத்து மற்றும் அனைத்து நிலைத்தன்மை அளவுருக்களையும் பூர்த்தி செய்வதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central governmentapprovesJute sack bag
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் முதல் புல்லட் இரயில் நிலையம்!

Next Post

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : அரையிறுதியில் இந்திய வீராங்கனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies