பேக்கேஜிங்கில் சணல் கட்டாயப் பயன்பாடு: முன்பதிவு விதிமுறைகளுக்கு அரசு ஒப்புதல்!
Sep 13, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேக்கேஜிங்கில் சணல் கட்டாயப் பயன்பாடு: முன்பதிவு விதிமுறைகளுக்கு அரசு ஒப்புதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 9, 2023, 05:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023-24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால், உணவு தானியங்களை 100 சதவிகிதம் சணல் சாக்குகளில்தான் பேக்கேஜிங் செய்ய வேண்டும்.

இந்தியாவில் சணல் பயிர் உற்பத்தியில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் உள்ள சணல் தொழிற்சாலைகளில் 75 சதவீதம் மேற்கு வங்கத்தில்தான் உள்ளன. மத்திய அரசு பொது வினியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களின் விநியோகத்திற்கு சணல் பைகளை பயன்படுத்துமாறு தேசிய உணவு கழகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.

இதன்படி, உணவுக் கழகமும், இதர மாநில முகமை அமைப்புகளும், உணவு தானியங்களை சணல் பைகளில் அடைத்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வருகின்றன. இதற்காக, கரீப் மற்றும் ரபி பருவங்களில் சணல் பைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சணல் துறை ஆண்டுக்கு 15 லட்சம் டன் சணல் பைகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

இதில், சுமார் 35 – 40 சதவீதம், அதாவது 8 லட்சம் டன் சணல் பைகளை, தேசிய உணவுக் கழகம் கொள்முதல் செய்கிறது. இந்த சணல் பைகள், பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிஸா மற்றும் பீகார் மாநிலங்களின் உணவு தானியக் கொள்முதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இதர மாநில முகமை அமைப்புகளும் சணல் பைகளை கொள்முதல் செய்கின்றன.

ஆனால், சணல் பைகள் அதிக விலை கொண்டதாக இருப்பதால், முகமை அமைப்புகள் சணல் சாக்குகளை கொள்முதல் செய்யாமல் பாலிதீன் சாக்குகளை கொள்முதல் செய்து வருகின்றன. இதனால், சணல் தொழில் நசிந்து வருவதோடு, அத்துறை 1,000 கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், 2023- 24-ம் ஆண்டுக்கான பேக்கேஜிங்கில் சணலை கட்டாயமாகப் பயன்படுத்துவதற்கான முன்பதிவு விதிமுறைகளை அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, உணவு தானியங்களை 100 சதவீதமும், சர்க்கரையை 20 சதவீதமும் கட்டாயமாக சணல் பைகளில் பேக் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, தற்போதைய முன்மொழிவில் உள்ள இட ஒதுக்கீடு விதிமுறைகள், இந்தியாவில் உள்ள சணல் மற்றும் சணல் பேக்கேஜிங் பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியின் நலனை பாதுகாக்கும். மேலும், இதன் மூலம் ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் தன்னிறைவு பெறும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சணல் பேக்கேஜிங் பொருட்கள் (பேக்கிங் பொருட்களில் கட்டாய பயன்பாடு) ஜே.பி.எம். சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம், சணல் ஆலைகள் மற்றும் துணை அலகுகளில் பணிபுரியும் 4 லட்சம் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதோடு, சுமார் 40 லட்சம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கும்.

இது தவிர, சணல் இயற்கையானது, மக்கக்கூடியது, புதுப்பிக்கத்தக்கது மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய நார்ச்சத்து மற்றும் அனைத்து நிலைத்தன்மை அளவுருக்களையும் பூர்த்தி செய்வதால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central governmentapprovesJute sack bag
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டின் முதல் புல்லட் இரயில் நிலையம்!

Next Post

கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : அரையிறுதியில் இந்திய வீராங்கனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies