கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால்தான் எனது பதவி பறிபோனது: நவாஸ் ஷெரீப்!
Aug 19, 2025, 06:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால்தான் எனது பதவி பறிபோனது: நவாஸ் ஷெரீப்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் இராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததால்தான், பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பரபரப்புத் தகவலை கூறியிருக்கிறார்.

1990 முதல் 1993 வரையும், 1997 முதல் 1999 வரையும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். மேலும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவர், 1999-ம் ஆண்டு இராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரப்பின் இராணுவப் புரட்சியால் ஆட்சியை இழந்தார்.

இந்த நிலையில்தான், தான் பதவியில் இருந்து அகற்றப்பட்டதற்கு, கார்கில் ஊடுருவல் திட்டத்தை எதிர்த்ததுதான் காரணம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கூறுகையில், “1993 மற்றும்1999-ம் ஆண்டுகளில் நான் ஏன் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டேன் என்று அனைவரிடமும் கூற வேண்டும்.

பாகிஸ்தான் இராணுவத்தின் கார்கில் ஊடுருவல் திட்டத்தை நான் எதிர்த்தேன். அது நடக்கக் கூடாது என்றேன். இதனால், அப்போதைய இராணுவ தளபதி முஷாரப், என்னை பிரதமர் பதவியில் இருந்து அகற்றினார். கடைசியில் நான் சொன்னது தான் சரி என்பது நிரூபணம் ஆனது.

நான் பிரதமர் பதவியில் இருந்தபோதுதான், 2 இந்திய பிரதமர்கள் பாகிஸ்தான் வந்தனர். நரேந்திர மோடியும், வாஜ்பாயும் லாகூர் வந்தனர். இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுடன் உறவை வலுப்படுத்த வேண்டும். சீன உறவை இன்னும் வலுவாக்குவது முக்கியம்.

இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, நாடு பொருளாதாரத்தில் சரியத் தொடங்கியது. ஆனால், ஷெபாஸ் ஷெரீப் பதவிக் காலத்தில் நாடு திவாலாவதில் இருந்து தடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார். கார்கில் ஊடுருவலை தடுத்ததால்தான் தான் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக நவாஸ் ஷெரீப் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: pakistanNawas SherifMushsraf
ShareTweetSendShare
Previous Post

முத்து ரீ ரிலீஸ் : படத்தைப் பார்த்து ரசித்த நடிகை மீனா!

Next Post

கும்பாபிஷேகத்திற்கு முன் வெளிவந்த இராமர் கோவில் கருவறையின் புகைப்படம்!  

Related News

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies