விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!
Oct 3, 2025, 07:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!

ஆப்கானிஸ்தான் வீரர் விருப்பம்!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 06:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூரு அணிக்காக விளையாடி, விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பை வென்று தர வேண்டும் என்பதே தனது ஆசை என ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதில் இந்தியாவிலிருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 10 ஐபிஎல் அணிகளால் மொத்தமாக 77 இடங்களை மட்டுமே நிரப்ப முடியும்.

அதில் 30 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 47 இந்திய வீரர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதனால் எந்தெந்த வீரருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிகளவில் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணியின் ஏராளமான வீரர்கள் டி20 லீக் மற்றும் டி10 லீக் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு அணிகளின் திட்டங்களில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரான் ஏலத்தில் வாங்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து இப்ராஹிம் ஜத்ரான் பேசுகையில், ஒவ்வொரு வீரரையும் போல் எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுதான் எனது கனவு என்றும் சொல்லலாம்.

அதேபோல் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. இம்முறை அவருடன் இணைந்து பயணித்து கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜத்ரான் 1,712 ரன்களை விளாசியுள்ளார். அதில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 பேட்டிங் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: virat kohliAfghanistaniplIbrahim zadran
ShareTweetSendShare
Previous Post

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

Next Post

பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? – அண்ணாமலை கேள்வி!

Related News

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies