விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!
Sep 13, 2026, 03:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று தர வேண்டும்!

ஆப்கானிஸ்தான் வீரர் விருப்பம்!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரு அணிக்காக விளையாடி, விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பை வென்று தர வேண்டும் என்பதே தனது ஆசை என ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் ஜத்ரான் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதில் இந்தியாவிலிருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 10 ஐபிஎல் அணிகளால் மொத்தமாக 77 இடங்களை மட்டுமே நிரப்ப முடியும்.

அதில் 30 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 47 இந்திய வீரர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதனால் எந்தெந்த வீரருக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அதிகளவில் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஆப்கானிஸ்தான் அணியின் ஏராளமான வீரர்கள் டி20 லீக் மற்றும் டி10 லீக் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இந்திய ஆடுகளங்களுக்கு ஏற்ப ஆப்கானிஸ்தான் அணி விளையாடியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு அணிகளின் திட்டங்களில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரான் ஏலத்தில் வாங்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் குறித்து இப்ராஹிம் ஜத்ரான் பேசுகையில், ஒவ்வொரு வீரரையும் போல் எனக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதுதான் எனது கனவு என்றும் சொல்லலாம்.

அதேபோல் ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றதில்லை. இம்முறை அவருடன் இணைந்து பயணித்து கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜத்ரான் 1,712 ரன்களை விளாசியுள்ளார். அதில் 140 ஸ்ட்ரைக் ரேட்டில் 31 பேட்டிங் சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: virat kohliAfghanistaniplIbrahim zadran
Share
Tweet
SendShare
Previous Post

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

Next Post

பொது மக்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் தமிழக அரசின் பங்கு என்ன? – அண்ணாமலை கேள்வி!

Related News

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies