மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!
Mar 15, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கே.லட்சுமணன் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. எனினும், 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், ராஜஸ்தானில் ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கரில் ஏற்கெனவே 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங் ஆகியோருக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பா.ஜ.க. தலைமை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கருதுகிறது. இதுதான் குழப்பத்திற்குக் காரணமாம். ஆகவே, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஒரு குழுவும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஒரு குழுவும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மத்திய பழங்குடியின அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் இன்று கூடி விவாதிக்கிறது. இக்கூட்டத்திற்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, மத்தியப் பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய பார்வையாளரும், ஹரியானா முதல்வருமான மனோகர் லால் கட்டார் தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கே.லட்சுமணன் கூறுகையில், “மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு நாளை கூடி விவாதிக்கிறது.

அப்போது, மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைகளைப் பெற்று, முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு அலுவலகத்தில் நடந்த சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், சோனியாவும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சி இருக்கும் இடத்தில் ஊழல்தான் இருக்கிறது. அதேசமயம், ஊழலுக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத பார்வையை பிரதமர் மோடி கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி ஊழல்வாதிகளை சும்மா விடமாட்டார். விரைவில் காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்துவார்” என்றார்.

Tags: bjp mpMadya PradeshCM candidateK Lakshmanan
ShareTweetSendShare
Previous Post

மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

Next Post

ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசல் வழியாக செல்ல முயன்ற லாரி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies