மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!
Jul 26, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!

Web Desk by Web Desk
Dec 10, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கே.லட்சுமணன் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. எனினும், 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், ராஜஸ்தானில் ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கரில் ஏற்கெனவே 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங் ஆகியோருக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பா.ஜ.க. தலைமை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கருதுகிறது. இதுதான் குழப்பத்திற்குக் காரணமாம். ஆகவே, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஒரு குழுவும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஒரு குழுவும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மத்திய பழங்குடியின அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் இன்று கூடி விவாதிக்கிறது. இக்கூட்டத்திற்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, மத்தியப் பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய பார்வையாளரும், ஹரியானா முதல்வருமான மனோகர் லால் கட்டார் தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கே.லட்சுமணன் கூறுகையில், “மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு நாளை கூடி விவாதிக்கிறது.

அப்போது, மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைகளைப் பெற்று, முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு அலுவலகத்தில் நடந்த சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், சோனியாவும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சி இருக்கும் இடத்தில் ஊழல்தான் இருக்கிறது. அதேசமயம், ஊழலுக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத பார்வையை பிரதமர் மோடி கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி ஊழல்வாதிகளை சும்மா விடமாட்டார். விரைவில் காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்துவார்” என்றார்.

Tags: bjp mpMadya PradeshCM candidateK Lakshmanan
ShareTweetSendShare
Previous Post

மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

Next Post

ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசல் வழியாக செல்ல முயன்ற லாரி!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies