மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!
Apr 29, 2026, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில எம்.பி. அலுவலகத்தில் இருந்து 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் ராகுலும், சோனியா காந்தியும் மௌனம் காப்பது ஏன் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தீரஜ் சாஹூ. ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இவருக்குச் சொந்தமாக ஜார்க்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மதுபான தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த மதுபானத் தொழிற்சாலைகளில் கடந்த 6-ம் தேதி முதல் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 4 நாட்களாகியும் பணம் எண்ணும் பணி இன்னும் நிறைவடையவில்லை.

நாட்டில் கைப்பற்றப்பட்டதில், இதுதான் மிகப்பெரிய கருப்புப் பணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு வெளியே பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மேற்கு டெல்லி எம்.பி. பர்வேஷ் வர்மா, டெல்லி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, எம்.எல்.ஏ. விஜேந்திர குப்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்தியுடன் தீரஜ் சாஹு கலந்துகொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் பா.ஜ.க.வின் அமித் மாளவியா, “உண்மையில் இந்த யாத்திரை நாட்டின் திருடர்களை ஒன்றிணைப்பதற்காகவே” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவரும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி, “ராகுலின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான தீரஜ் சாஹூவின் அலுவலகங்களில் இருந்து, சுமார் 300 கோடி ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றி இருக்கிறது.

தீரஜ் சாஹூவுக்கு எதிரான வருமான வரித்துறை சோதனைகள் குறித்து, ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் எதுவும் கேட்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். இதைப் பற்றி ராகுல் ஏன் சமூக வலைதளங்களில் எதுவும் பதிவிடவில்லை? ஏனென்றால் காங்கிரஸ் எப்போதும் ஊழலை ஆதரிக்கிறது. நீங்கள் எப்போதும் வருமான வரித்துறையை விமர்சிக்கிறீர்கள். ஆனால், இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Tags: rahul gandhikishan reddybjp mpattack Congress
ShareTweetSendShare
Previous Post

‘வளர்ச்சி அடைந்த இந்தியா @2047: இளைஞர்களின் குரல்’ திட்டம் நாளை தொடக்கம்!

Next Post

மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies