மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!
Apr 29, 2026, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேச முதல்வர் யார்? ஓரிரு நாளில் அறிவிப்பு: பா.ஜ.க. எம்.பி.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கே.லட்சுமணன் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றிருக்கிறது. எனினும், 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான், ராஜஸ்தானில் ஏற்கெனவே 2 முறை முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கரில் ஏற்கெனவே 3 முறை முதல்வராக இருந்த ராமன் சிங் ஆகியோருக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பா.ஜ.க. தலைமை புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று கருதுகிறது. இதுதான் குழப்பத்திற்குக் காரணமாம். ஆகவே, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக மத்தியப் பார்வையாளர்களை பா.ஜ.க. தலைமை நியமித்திருக்கிறது.

அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஒரு குழுவும், ராஜஸ்தான் மாநிலத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ஒரு குழுவும், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மத்திய பழங்குடியின அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையில் இன்று கூடி விவாதிக்கிறது. இக்கூட்டத்திற்குப் பிறகு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, மத்தியப் பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்கான பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், மத்திய பார்வையாளரும், ஹரியானா முதல்வருமான மனோகர் லால் கட்டார் தலைமையில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழலில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கே.லட்சுமணன் கூறுகையில், “மத்தியப் பிரதேச முதல்வர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும். இது தொடர்பாக, ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான மத்தியப் பார்வையாளர்கள் குழு நாளை கூடி விவாதிக்கிறது.

அப்போது, மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைகளைப் பெற்று, முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு அலுவலகத்தில் நடந்த சோதனையில் 300 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியும், சோனியாவும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் ஆட்சி இருக்கும் இடத்தில் ஊழல்தான் இருக்கிறது. அதேசமயம், ஊழலுக்கு எதிரான சகிப்புத்தன்மை இல்லாத பார்வையை பிரதமர் மோடி கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி ஊழல்வாதிகளை சும்மா விடமாட்டார். விரைவில் காங்கிரஸ் கட்சியை அம்பலப்படுத்துவார்” என்றார்.

Tags: bjp mpMadya PradeshCM candidateK Lakshmanan
ShareTweetSendShare
Previous Post

மௌனம் காப்பது ஏன்? ராகுல், சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

Next Post

ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசல் வழியாக செல்ல முயன்ற லாரி!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies