இராமர் மீண்டும் மக்களின் இதயங்களில் இடம்பெறுவார்: ஆர்.எஸ்.எஸ்.!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் மீண்டும் மக்களின் இதயங்களில் இடம்பெறுவார்: ஆர்.எஸ்.எஸ்.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிறந்த இடத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவிலுக்கு ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் திரும்புவார். இதன் பிறகு, மக்களின் மனதிலும், இதயத்திலும் இடம் பெறுவார் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் ஷர்மா எழுதிய “இராமர் திரும்பி வருகிறார்” என்கிற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. விழாவில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, சுவாமி கியானாநந்த மகராஜ், நீதியரசர் ஹேமந்த் குப்தா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபலே, “மதத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் எப்போதும் இருந்து வருகிறது. ஸ்ரீராம ஜென்மபூமிக்காக 72 முறை போராட்டம் நடந்தது. ஒவ்வொரு தலைமுறையும் போராடியது. ஆனால், வெற்றி கிட்டும் வரை போராட்டத்தைக் கைவிடவில்லை. இப்போராட்டத்தில் எல்லா மொழி, வர்க்கம், சமூகம் மற்றும் பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

பகவான் ஸ்ரீராமர் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு, தனது அரண்மனைக்குத் திரும்பினார். அதேபோல, 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் தனது பிறந்த இடத்தில் கட்டப்பட்ட அற்புதமான கோவிலுக்குத் திரும்புகிறார். இதன் பிறகு, ஸ்ரீராமர் மீண்டும் மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் இடம்பெறுவார்.

ஸ்ரீராமர் கோவில் இயக்கம், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற வலதுசாரி அமைப்புகளால் அயோத்தி மீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராமர் மங்களகரமானவர், இராமர் என்றாலே உத்வேகம். இராமர் என்பது நம்பிக்கை. அயோத்தி இராமர் கோயில் ஒரு கோயில், சுற்றுலாத் தலமல்ல. அது புனித யாத்திரையின் தூண். ஸ்ரீராமரின் அயோத்தி என்றால் துறவு. அயோத்தி என்றால் ஜனநாயகம். அயோத்தி என்றால் கண்ணியம்” என்றார்.

இத்தகவல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

Tags: dattatreya hosabaleRam Temple
ShareTweetSendShare
Previous Post

One Bharat Sari Walkathon: : கைத்தறி சேலை அணிந்து அணிவகுத்த பெண்கள்!

Next Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies