இராமர் மீண்டும் மக்களின் இதயங்களில் இடம்பெறுவார்: ஆர்.எஸ்.எஸ்.!
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமர் மீண்டும் மக்களின் இதயங்களில் இடம்பெறுவார்: ஆர்.எஸ்.எஸ்.!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 05:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, அயோத்தியில் உள்ள தனது பிறந்த இடத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோவிலுக்கு ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் திரும்புவார். இதன் பிறகு, மக்களின் மனதிலும், இதயத்திலும் இடம் பெறுவார் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் ஷர்மா எழுதிய “இராமர் திரும்பி வருகிறார்” என்கிற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. விழாவில், ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, சுவாமி கியானாநந்த மகராஜ், நீதியரசர் ஹேமந்த் குப்தா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செயல் தலைவர் அலோக் குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய தத்தாத்ரேய ஹோசபலே, “மதத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் எப்போதும் இருந்து வருகிறது. ஸ்ரீராம ஜென்மபூமிக்காக 72 முறை போராட்டம் நடந்தது. ஒவ்வொரு தலைமுறையும் போராடியது. ஆனால், வெற்றி கிட்டும் வரை போராட்டத்தைக் கைவிடவில்லை. இப்போராட்டத்தில் எல்லா மொழி, வர்க்கம், சமூகம் மற்றும் பிரிவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

பகவான் ஸ்ரீராமர் 14 வருட வனவாசத்திற்குப் பிறகு, தனது அரண்மனைக்குத் திரும்பினார். அதேபோல, 500 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராமர் தனது பிறந்த இடத்தில் கட்டப்பட்ட அற்புதமான கோவிலுக்குத் திரும்புகிறார். இதன் பிறகு, ஸ்ரீராமர் மீண்டும் மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் இடம்பெறுவார்.

ஸ்ரீராமர் கோவில் இயக்கம், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற வலதுசாரி அமைப்புகளால் அயோத்தி மீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராமர் மங்களகரமானவர், இராமர் என்றாலே உத்வேகம். இராமர் என்பது நம்பிக்கை. அயோத்தி இராமர் கோயில் ஒரு கோயில், சுற்றுலாத் தலமல்ல. அது புனித யாத்திரையின் தூண். ஸ்ரீராமரின் அயோத்தி என்றால் துறவு. அயோத்தி என்றால் ஜனநாயகம். அயோத்தி என்றால் கண்ணியம்” என்றார்.

இத்தகவல் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

Tags: dattatreya hosabaleRam Temple
Share
Tweet
SendShare
Previous Post

One Bharat Sari Walkathon: : கைத்தறி சேலை அணிந்து அணிவகுத்த பெண்கள்!

Next Post

கார்த்தி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies