வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!
Jan 14, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா வலியுறுத்தி இருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலப் போராட்டத்தில் உயர் நீத்த தியாகிகளின் நினைவாக “ஸ்வாஹித் திவாஸ்” நிகழ்ச்சி, கௌஹாத்தியில் உள்ள போராகவ்னில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ‘ஸ்வாஹித் திவாஸ்’ நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிஸ்வாஸ் ஷர்மா, “பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, அஸ்ஸாம் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலத்தை சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போதுதான், நமது சமூகம் பாதுகாக்கப்படும்.

சில குடும்பங்கள் தங்கள் நிலத்தை பொருளாதார நலனுக்காக விற்கிறார்கள். ஆனால், பல குடும்பங்களுக்கு பணம் தேவையில்லை. எனினும், அவர்களும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்கிறார்கள். எனவே, எங்கள் நிலத்தை இனி சந்தேகப்படும்படியான வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம்.

மேலும், மஜூலி, பர்பேட்டா மற்றும் படத்ராவா போன்ற இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்பனை செய்வதைத் தடை செய்யும் வகையில், புதிய சட்டத்தை அரசு கொண்டு வரும். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான 6 ஆண்டுகால போராட்டம் வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.

தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அஸ்ஸாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால், மாநில இளைஞர்களோ வேலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்றனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெளிநாட்டினர், முக்கியமான இடங்களில் வர்த்தகத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நிதி வளர்ச்சியும், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாப்பதும் முக்கியம். ஆகவே, மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் உழைப்பின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) புனிதத்தன்மையை கெடுக்கும் வகையில், சில அதிகாரிகள் மோசடியாக சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர் பெயர்களைச் சேர்த்திருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார்.

Tags: AssamCM himanta biswa sarma
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

Next Post

குடியரசுத் தலைவர் உத்தரப்பிரதேசத்திற்கு பயணம்!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies