வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!
Jul 5, 2025, 12:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டவருக்கு நிலத்தை விற்க மாட்டோம்: அஸ்ஸாம் மக்களிடம் உறுதி கேட்கும் முதல்வர்!

Web Desk by Web Desk
Dec 11, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என் மக்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் ஷர்மா வலியுறுத்தி இருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலப் போராட்டத்தில் உயர் நீத்த தியாகிகளின் நினைவாக “ஸ்வாஹித் திவாஸ்” நிகழ்ச்சி, கௌஹாத்தியில் உள்ள போராகவ்னில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ‘ஸ்வாஹித் திவாஸ்’ நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வாஸ் சர்மா கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிஸ்வாஸ் ஷர்மா, “பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பாதுகாப்பதற்காக, அஸ்ஸாம் மக்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலத்தை சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போதுதான், நமது சமூகம் பாதுகாக்கப்படும்.

சில குடும்பங்கள் தங்கள் நிலத்தை பொருளாதார நலனுக்காக விற்கிறார்கள். ஆனால், பல குடும்பங்களுக்கு பணம் தேவையில்லை. எனினும், அவர்களும் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்கிறார்கள். எனவே, எங்கள் நிலத்தை இனி சந்தேகப்படும்படியான வெளிநாட்டவருக்கு விற்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம்.

மேலும், மஜூலி, பர்பேட்டா மற்றும் படத்ராவா போன்ற இடங்களில் வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்பனை செய்வதைத் தடை செய்யும் வகையில், புதிய சட்டத்தை அரசு கொண்டு வரும். சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான 6 ஆண்டுகால போராட்டம் வெறும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டதல்ல.

தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் அஸ்ஸாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால், மாநில இளைஞர்களோ வேலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கின்றனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெளிநாட்டினர், முக்கியமான இடங்களில் வர்த்தகத்தை கைப்பற்றி இருக்கிறார்கள்.

எந்தவொரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் நிதி வளர்ச்சியும், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாப்பதும் முக்கியம். ஆகவே, மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும். இளைஞர்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் உழைப்பின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) புனிதத்தன்மையை கெடுக்கும் வகையில், சில அதிகாரிகள் மோசடியாக சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினர் பெயர்களைச் சேர்த்திருக்கிறார்கள். இவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார்.

Tags: AssamCM himanta biswa sarma
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி!

Next Post

குடியரசுத் தலைவர் உத்தரப்பிரதேசத்திற்கு பயணம்!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies