எங்களது இலக்கு 400 சீட்... காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!
Jan 14, 2026, 06:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எங்களது இலக்கு 400 சீட்… காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாங்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் இலக்கு நிர்ணயித்தால், காங்கிரஸ் கட்சி 400 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டல் செய்திருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் தீரஜ் சாஹூ. இவர், ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மதுபானத் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் தீரஜ் சாஹூவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி அதிரடியாக சோதனையைத் தொடங்கினர். இச்சோதனையில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை சுமார் 350 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இப்பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல, வருமான வரித்துறையினரின் சோதனையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் இலக்கான 400 இடங்களுடன், தற்போதைய காங்கிரஸ் கட்சியின் ஊழலுடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கிண்டல் செய்திருக்கிறார். இதுகுறித்து அனுராக் தாக்கூர் கூறுகையில், “பா.ஜ.க. மக்களிடம் இருந்து தொடர்ந்து ஆதரவைப் பெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் பொது நலத்திட்டக் கொள்கைதான் காரணம். அனைத்துத் துறைகளிலும் நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.

நரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் 400 இடங்களில் வெற்றி பெறுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் தலைவர் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழலில் ஈடுபட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் இருந்தே எப்போதும் ஊழல் மற்றும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதனால்தான் அக்கட்சி எப்போதுமே அமக்கலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஆகியவற்றிற்கு எதிராக நிற்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Anurag ThakurCongressCorruption
ShareTweetSendShare
Previous Post

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

Next Post

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies