சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
Sep 6, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 03:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உங்கள் தலைவருக்காக உங்களது உயிரை இழக்காதீர்கள். சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் முப்படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள்.

ஏன்டா தொட்டோம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் கதறும் அளவுக்கு, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அசுரத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது. விமானப்படைத் தாக்குதலில் காஸா நகரின் வடக்குப் பகுதியை சின்னாபின்னமாக்கிய இஸ்ரேல் இராணுவம், தற்போது தெற்குப் பகுதியிலும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.

இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஹமாஸ் தீவிரவாதிகள், பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று இஸ்ரேலை மிரட்டிப் பார்த்தது. ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காத இஸ்ரேல் இராணுவம் தெற்கு காஸாவில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் மக்களோடு மக்களாக பதுங்கி இருந்த தீவிரவாதிகள் உயிரிழந்து வருகிறார்கள்.

எனவே, இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் உயிரை இழப்பதை விட, சரணடைந்து உயிர் வாழ்வதே மேல் என்று கருதி, ஹமாஸ் தீவிரவாதிகள் பலரும் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். இதையடுத்து, சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், “போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கி விட்டது. எனவே, போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும். உங்கள் தலைவருக்காக உங்களது உயிரை இழக்காதீர்கள். சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி. ஏற்கெனவே, பல ஹமாஸ் தீவிரவாதிகள் எங்கள் படைகளிடம் சரணடைந்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelHamasPM NetanyaguWarns
Share
Tweet
SendShare
Previous Post

எங்களது இலக்கு 400 சீட்… காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!

Next Post

பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies