சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
Jan 14, 2026, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 11, 2023, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உங்கள் தலைவருக்காக உங்களது உயிரை இழக்காதீர்கள். சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் முப்படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஹமாஸ் தீவிரவாதிகள் திணறி வருகிறார்கள்.

ஏன்டா தொட்டோம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் கதறும் அளவுக்கு, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அசுரத் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது. விமானப்படைத் தாக்குதலில் காஸா நகரின் வடக்குப் பகுதியை சின்னாபின்னமாக்கிய இஸ்ரேல் இராணுவம், தற்போது தெற்குப் பகுதியிலும் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.

இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஹமாஸ் தீவிரவாதிகள், பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று இஸ்ரேலை மிரட்டிப் பார்த்தது. ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காத இஸ்ரேல் இராணுவம் தெற்கு காஸாவில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் மக்களோடு மக்களாக பதுங்கி இருந்த தீவிரவாதிகள் உயிரிழந்து வருகிறார்கள்.

எனவே, இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் உயிரை இழப்பதை விட, சரணடைந்து உயிர் வாழ்வதே மேல் என்று கருதி, ஹமாஸ் தீவிரவாதிகள் பலரும் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்து வருகிறார்கள். இதையடுத்து, சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், “போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், ஹமாஸ் முடிவுக்கு வருவது தொடங்கி விட்டது. எனவே, போர் விரைவில் முடிவுக்கு வந்து விடும். உங்கள் தலைவருக்காக உங்களது உயிரை இழக்காதீர்கள். சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி. ஏற்கெனவே, பல ஹமாஸ் தீவிரவாதிகள் எங்கள் படைகளிடம் சரணடைந்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Tags: IsraelHamasPM NetanyaguWarns
ShareTweetSendShare
Previous Post

எங்களது இலக்கு 400 சீட்… காங்கிரஸ் இலக்கு ரூ.400 கோடி ஊழல்: மத்திய அமைச்சர் கிண்டல்!

Next Post

பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies