பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!
Jan 14, 2026, 11:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழங்காலத்திலிருந்தே இந்தியாவின் அறிவுப் பாரம்பரிய மையமாக வாரணாசி திகழ்கிறது!

- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர்,

இந்த நிறுவனத்துடன் இரண்டு பாரத ரத்னாவை இணைத்திருப்பது மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு சான்றாகும். பாரத ரத்னா டாக்டர் பகவான் தாஸ் இந்த வித்யாபீடத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார் மற்றும் முன்னாள் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி இந்த நிறுவனத்தின் முதல் தொகுதி மாணவர் ஆவார்.

சாஸ்திரி ஜியின் வாழ்க்கை விழுமியங்களை தங்கள் நடத்தையில் பின்பற்ற வேண்டும் என்று இந்த நிறுவனத்தின் மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்று  கூறினார்.

இந்த வித்யாபீடத்தின் பயணம் நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே காந்திஜியின் இலக்கான சுயசார்பு மற்றும் சுயராஜ்ஜியத்தை இலக்காகக் கொண்டு தொடங்கியதாக குறிப்பிட்டார்.

இந்தப் பல்கலைக்கழகம், ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்து உருவான ஒரு நிறுவனமாக, நமது மாபெரும் சுதந்திரப் போராட்டத்தின் வாழும் அடையாளமாக உள்ளது. மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் அனைத்து மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தின் தேசிய இலட்சியங்களின் கொடி ஏந்தியவர்கள் என்று கூறினார்.

காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று கூறினார்.

அமிர்த காலத்தின் போது அந்த இலட்சியங்களைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு பயனுள்ள பங்களிப்பை வழங்குவது வித்யாபீடத்தின் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிறுவனர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

பழங்காலத்திலிருந்தே இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் மையமாக வாரணாசி திகழ்கிறது என்று கூறினார். இன்றும் இந்நகரில் உள்ள நிறுவனங்கள் நவீன அறிவு மற்றும் அறிவியலை மேம்படுத்துவதில் பங்காற்றுகின்றன.

மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அறிவு மையத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப தங்கள் நிறுவனத்தின் பெருமையை தொடர்ந்து வளப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Tags: President Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

Next Post

கூட்டு இராணுவப் பயிற்சிக்காக இந்திய இராணுவக் குழு வியட்நாம் சென்றது!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies