காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் நடைபெற்ற மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவில் பேசிய குடியரசுத் தலைவர்,
இந்த நிறுவனத்துடன் இரண்டு பாரத ரத்னாவை இணைத்திருப்பது மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்திற்கு சான்றாகும். பாரத ரத்னா டாக்டர் பகவான் தாஸ் இந்த வித்யாபீடத்தின் முதல் துணைவேந்தராக இருந்தார் மற்றும் முன்னாள் பிரதமர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி இந்த நிறுவனத்தின் முதல் தொகுதி மாணவர் ஆவார்.
சாஸ்திரி ஜியின் வாழ்க்கை விழுமியங்களை தங்கள் நடத்தையில் பின்பற்ற வேண்டும் என்று இந்த நிறுவனத்தின் மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
இந்த வித்யாபீடத்தின் பயணம் நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்னரே காந்திஜியின் இலக்கான சுயசார்பு மற்றும் சுயராஜ்ஜியத்தை இலக்காகக் கொண்டு தொடங்கியதாக குறிப்பிட்டார்.
இந்தப் பல்கலைக்கழகம், ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்து உருவான ஒரு நிறுவனமாக, நமது மாபெரும் சுதந்திரப் போராட்டத்தின் வாழும் அடையாளமாக உள்ளது. மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் அனைத்து மாணவர்களும் சுதந்திரப் போராட்டத்தின் தேசிய இலட்சியங்களின் கொடி ஏந்தியவர்கள் என்று கூறினார்.
காசி வித்யாபீடத்திற்கு மகாத்மா காந்தி காசி வித்யாபீடம் எனப் பெயரிடப்பட்டதன் நோக்கம் நமது சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களுக்கு மதிப்பளிப்பதே என்று கூறினார்.
அமிர்த காலத்தின் போது அந்த இலட்சியங்களைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு பயனுள்ள பங்களிப்பை வழங்குவது வித்யாபீடத்தின் தேசத்தைக் கட்டியெழுப்பும் நிறுவனர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
பழங்காலத்திலிருந்தே இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் மையமாக வாரணாசி திகழ்கிறது என்று கூறினார். இன்றும் இந்நகரில் உள்ள நிறுவனங்கள் நவீன அறிவு மற்றும் அறிவியலை மேம்படுத்துவதில் பங்காற்றுகின்றன.
மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் அறிவு மையத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப தங்கள் நிறுவனத்தின் பெருமையை தொடர்ந்து வளப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.