டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேச பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தமது X பக்கத்தில், ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே,சிறப்பு சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது தான்.அதை ரத்து செய்தது சரியே என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
நம் பாரதப்பிரதமர் .நரேந்திர மோடியின் தொலைநோக்கு முயற்சியில் நாடாளுமன்றத்தில் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதை அங்கீகரித்து மசோதா நிறைவேற்றம் செய்தார்கள்.
அதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே,சிறப்பு சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது தான். அதை ரத்து செய்தது சரியே என்று அளித்த தீர்ப்பின் மூலம் நமது தேசத்தின் ஒற்றுமை மோலோங்கியிருக்கிறது.
டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேசபக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது.ஜம்மு & காஷ்மீர் நமது இந்திய திருநாட்டின் ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் வந்து மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வளர்ச்சியின் பாதையில் செல்லும் என குறிப்பிட்டுள்ளார்.