நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் பணியில் தமிழகத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பள்ளி, கல்லூரி தேர்வுகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
அதேபோல, மாநிலம் முழுவதும் நடைபெற உள்ள திருவிழாக்கள் குறித்த விவரங்களையும், தமிழக அரசிடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. மேலும், புதிய வாக்காளர்களுக்கு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் இலவச வாக்காளர் அட்டை வழங்கப்படும் என தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம், மக்களவைத் தேர்தலை நடத்துவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.