ஜம்மு காஷ்மீர் மசோதாக்கள்: மாநிலங்களவையில் அமித்ஷா தாக்கல்!
Sep 9, 2025, 08:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் மசோதாக்கள்: மாநிலங்களவையில் அமித்ஷா தாக்கல்!

Web Desk by Web Desk
Dec 12, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா 2023 ஆகியவற்றை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடியது. எனவே, அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய பா.ஜ.க. அரசால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிரவாதம் ஒடுக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய 2 மசோதாக்கள் கடந்த ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து, தற்போது நடந்துவரும் குளிர்கால கூட்டத் தொடரில் இந்த 2 மசோதாக்களும் டிசம்பர் 5-ம்தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. பின்னர், 2 மசோதாக்களையும் டிசம்பர் 6-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் மீதான விவாதங்கள் மக்களவையில் நடைபெற்றது. விவாதம் நிறைவு பெற்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாக்களுக்கு ஆதரவாக 370 வாக்குகளும், எதிராக 70 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட 2 மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், மேற்கண்ட 2 மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறார். தொடர்ந்து, மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மூலம் மாநிலத்தில் பட்டியலின மக்கள், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. அதேபோல, ஜம்மு காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதாவானது புலம்பெயா்ந்த சமூகத்திலிருந்து ஒருவரையும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஒருவரையும் ஜம்மு காஷ்மீா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வழிவகை செய்கிறது.

Tags: jammu kashmirrajya sabhaAmit shaBills
ShareTweetSendShare
Previous Post

கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள்!

Next Post

இத்தாலியில் ரயில் விபத்து : 17 பேர் படுகாயம்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies