பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 12, 2023, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, பூட்டானுடன் சீனா பேச்சு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு எல்லையில் தனியாக கிராமத்தையும், இராணுவ முகாம்களையும் அமைத்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு பக்கம் சீனாவுடனும், மற்றொரு பக்கம் பூட்டானுடனும் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்ற முயன்றது. ஆனால், இப்பகுதி 3 நாடுகளும் இணையும் இடத்தில் இருகிறது.

அந்த வகையில், பூட்டானின் டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றி விட்டால், நமது நாட்டு எல்லைக்குள் எளித்ல ஊடுருவுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படும். எனவே, சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டோக்லாம் எல்லையில் இந்தியா படைகளைக் குவித்தது.

இந்த சூழலில், நீண்டகாலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில், தற்போது பூட்டானும், சீனாவும் ஈடுபட்டிருக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தையும் தொடங்கி இருக்கிறது. இதனிடையே, வடக்கு பூட்டானின் ஜாகர்லாங்க் பள்ளத்தாக்கு பகுதியில், சீனா அசுர வேகத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஜாகர்லாங்க் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளை கட்டி இருக்கிறது. மேலும், தனது இராணுவ முகாமையும் சீனா உருவாக்கி வருகிறது. இந்த இடம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட சேட்டிலைட் படங்களில் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த இடம் ஒரு காலத்தில் தங்களது மேய்ச்சல் பகுதியாக இருந்ததாகக் கூறி, சீனா ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தையில், சீனா விதிக்கும் நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் பூட்டான் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

அதேசமயம், இப்பகுதி நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து, 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. ஆகவே, இப்பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டால், எதிர்காலத்தில் நம் நாட்டுக்குள் ஊடுருவி நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags: chinaBhutanMilitary Camp
ShareTweetSendShare
Previous Post

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

Next Post

ஒரே கதாபாத்திரத்திற்கு 5 மொழிகளில் வசனம் பேசிய நடிகர்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies