சென்னையில் போலீசாரிடம் இரண்டு இளம் ரவுடிகள் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்துார், மகாத்மா காந்தி நகர் 7 -வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 28). இவர் நேற்று தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆதிகேசவன் (வயது 20) மற்றும் மற்றொரு ரவுடியான அபித் என்கிற சின்னக் கருப்பு (வயது 19) ஆகிய இரண்டு பேரும், பிரகாசை வழிமறித்துள்ளனர்.
பின்னர், அவரிடம் பணம் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பைக்கை சேதப்படுத்தி, கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த பிரகாஷ், தனக்கு நடந்த சம்பவம் குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விசாரணை நடத்தினார். விசாரணையில், ரவுடிகள் அராஜகம் செய்தது உறுதியானது. இதனையடுத்து, ரவுடிகள் சின்னக் கருப்பு மற்றும் ஆதிகேசவன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதில் ஆதி மற்றும் சின்னக் கருப்பு மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது