சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!
Jan 14, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷாண சிலை என்றும், மரகதக்கல் கொண்டு செய்யப்பட்டது என்றும், இருவேறு கருத்துகள் உலா வருகின்றன.

சிவ – விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து தோன்றிய குழந்தை, கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் பிறந்தார். இதனால், ஐயப்பனை மணிகண்டன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடை உடுத்தி, துளசி மணி மாலையைக் குருசாமி கையால் அணிந்து, 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்குச் செல்வது வழக்கம்.

தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளில் சென்று ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்கின்றனர்.

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்து இருப்பது இல்லை. மலையாள மாதத்தின் கடைசி நாள் கோவில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படும்.

அதேபோல, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.

ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் மிகவும் புகழ் பெற்றவை. முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகச் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது மக்கள் சேவைப் பிரிவான சேவா பாரதி அமைப்புச் சார்பில், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே நெருக்கடியில் இருக்கின்றன. வனப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சேவாபாரதி சார்பில் உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஆம்புலன்ஸ் என ஒவ்வொரு வருடமும் ஐயப்ப சேவா ஜமாஷம் மற்றும் சேவா பாரதி செய்து வருகின்றன. சேவா பாரதியின் இந்த சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: Sabarimalaisabarimala temple
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.22 அடியாக அதிகரிப்பு!

Next Post

டி20: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies