சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!
Sep 27, 2025, 03:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!

Web Desk by Web Desk
Dec 13, 2023, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷாண சிலை என்றும், மரகதக்கல் கொண்டு செய்யப்பட்டது என்றும், இருவேறு கருத்துகள் உலா வருகின்றன.

சிவ – விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து தோன்றிய குழந்தை, கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் பிறந்தார். இதனால், ஐயப்பனை மணிகண்டன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடை உடுத்தி, துளசி மணி மாலையைக் குருசாமி கையால் அணிந்து, 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்குச் செல்வது வழக்கம்.

தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளில் சென்று ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்கின்றனர்.

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்து இருப்பது இல்லை. மலையாள மாதத்தின் கடைசி நாள் கோவில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படும்.

அதேபோல, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.

ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் மிகவும் புகழ் பெற்றவை. முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகச் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது மக்கள் சேவைப் பிரிவான சேவா பாரதி அமைப்புச் சார்பில், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே நெருக்கடியில் இருக்கின்றன. வனப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சேவாபாரதி சார்பில் உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஆம்புலன்ஸ் என ஒவ்வொரு வருடமும் ஐயப்ப சேவா ஜமாஷம் மற்றும் சேவா பாரதி செய்து வருகின்றன. சேவா பாரதியின் இந்த சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: Sabarimalaisabarimala temple
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.22 அடியாக அதிகரிப்பு!

Next Post

டி20: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

Related News

பிரியாவிடை பெற்ற வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

இந்திய பெருங்கடலில் வெப்பம் உயர்வதால் பேராபத்து : எச்சரிக்கை விடுக்கும் வானிலை ஆய்வாளர்கள்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

காப்புரிமை மருந்துகளுக்கு 100 % வரி : ட்ரம்பின் உத்தரவால் இந்திய மருந்து துறைக்கு பாதிப்பா?

Load More

அண்மைச் செய்திகள்

இயற்பியல் ஒலிம்பியாட்டில் அமெரிக்க அணி சாதனை : வெள்ளை மாளிகையே பெருமைபடுத்திய இந்திய வம்சாவளி மாணவன்!

மத்திய அரசின் மாஸ்டர் பிளான் : 2029 தேர்தலுக்கு முன் வடமாநிலங்களுக்கு சிந்து நதிநீர்!

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் களைகட்டும் விற்பனை : திண்பண்டங்கள் விலை குறைந்ததால் குஷி!

5001 கொலு பொம்மைகளுடன் கொலு மண்டபம்!

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

மிக்-21 போர் விமானங்கள் தேசத்தின் பெருமை : அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்!

ஓய்வு பெற்றது 3 போர் கண்ட மிக்-21 ஜெட்!

செந்தில் பாலாஜியுடனான மோதல் போக்கின் எதிரொலி : கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பதவி நீக்கம்!

திமுக ஆட்சியும் ஒரு வெற்று காகிதம் தான் : நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies