சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!
Jul 29, 2026, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷாண சிலை என்றும், மரகதக்கல் கொண்டு செய்யப்பட்டது என்றும், இருவேறு கருத்துகள் உலா வருகின்றன.

சிவ – விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து தோன்றிய குழந்தை, கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் பிறந்தார். இதனால், ஐயப்பனை மணிகண்டன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடை உடுத்தி, துளசி மணி மாலையைக் குருசாமி கையால் அணிந்து, 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்குச் செல்வது வழக்கம்.

தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளில் சென்று ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்கின்றனர்.

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்து இருப்பது இல்லை. மலையாள மாதத்தின் கடைசி நாள் கோவில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படும்.

அதேபோல, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.

ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் மிகவும் புகழ் பெற்றவை. முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகச் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது மக்கள் சேவைப் பிரிவான சேவா பாரதி அமைப்புச் சார்பில், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே நெருக்கடியில் இருக்கின்றன. வனப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சேவாபாரதி சார்பில் உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஆம்புலன்ஸ் என ஒவ்வொரு வருடமும் ஐயப்ப சேவா ஜமாஷம் மற்றும் சேவா பாரதி செய்து வருகின்றன. சேவா பாரதியின் இந்த சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: Sabarimalaisabarimala temple
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.22 அடியாக அதிகரிப்பு!

Next Post

டி20: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies