சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேவா பாரதியின் சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 10:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஐயப்ப சுவாமியின் சிலை புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷாணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷாண சிலை என்றும், மரகதக்கல் கொண்டு செய்யப்பட்டது என்றும், இருவேறு கருத்துகள் உலா வருகின்றன.

சிவ – விஷ்ணுவிடம் இருந்து வெளிப்பட்ட ஜோதியில் இருந்து தோன்றிய குழந்தை, கழுத்தில் மணியுடன் பம்பா நதிக்கரையில் பிறந்தார். இதனால், ஐயப்பனை மணிகண்டன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஐயப்ப பக்தர்கள் காவி, கருப்பு மற்றும் நீல நிற உடை உடுத்தி, துளசி மணி மாலையைக் குருசாமி கையால் அணிந்து, 48 நாட்கள் கடும் விரதம் இருந்து, இருமுடி கட்டி, மலைக்குச் செல்வது வழக்கம்.

தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட கவசத்தால் மூடப்பட்ட 18 படிகளில் சென்று ஐயப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்கின்றனர்.

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறந்து இருப்பது இல்லை. மலையாள மாதத்தின் கடைசி நாள் கோவில் நடை திறக்கப்பட்டு, மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சாத்தப்படும்.

அதேபோல, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாதத்துடன் கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும்.

ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் மிகவும் புகழ் பெற்றவை. முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காகச் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொது மக்கள் சேவைப் பிரிவான சேவா பாரதி அமைப்புச் சார்பில், சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவைப்படும் குடிநீர், உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய உணவுகளை வழங்கி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே நெருக்கடியில் இருக்கின்றன. வனப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சேவாபாரதி சார்பில் உணவு, தண்ணீர், பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள், அன்னதானம், ஆம்புலன்ஸ் என ஒவ்வொரு வருடமும் ஐயப்ப சேவா ஜமாஷம் மற்றும் சேவா பாரதி செய்து வருகின்றன. சேவா பாரதியின் இந்த சேவைக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Tags: Sabarimalaisabarimala temple
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 69.22 அடியாக அதிகரிப்பு!

Next Post

டி20: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies