நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை... விசாரிக்க குழு அமைப்பு!
Jul 25, 2025, 04:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை… விசாரிக்க குழு அமைப்பு!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்து, தங்களது ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த புகைக் குண்டுகளில் இருந்து வெளியேறிய மஞ்சள் நிற புகை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது.

மேலும், புகைக் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர், எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவிக் குதித்து அங்கும் இங்கும் ஓடினார். இதனால், எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில், சில எம்.பி.க்கள் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.

மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகைக் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அதேசமயம், இவர்களுடன் வந்திருந்த 2 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. எனினும், இவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 6-வது நபரான லலித் தலைமறைவாகி விட்டார். இவரிடம்தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன என்பதால், அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்டு அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். அப்போது, நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிப்பது, மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சி.ஆர்.பி.எஃப். கூடுதல் இயக்குனர் அனிஷ் தயாள் சிங் தலைமையில் விசாரணைக் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.

Tags: PM ModiAmit shaParliament attackDiscuss
ShareTweetSendShare
Previous Post

மோடி HAT-TRICK : மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் மோடி!

Next Post

இராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் வேலை!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies