நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை... விசாரிக்க குழு அமைப்பு!
Mar 15, 2026, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை… விசாரிக்க குழு அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்து, தங்களது ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த புகைக் குண்டுகளில் இருந்து வெளியேறிய மஞ்சள் நிற புகை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது.

மேலும், புகைக் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர், எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவிக் குதித்து அங்கும் இங்கும் ஓடினார். இதனால், எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில், சில எம்.பி.க்கள் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.

மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகைக் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அதேசமயம், இவர்களுடன் வந்திருந்த 2 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. எனினும், இவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 6-வது நபரான லலித் தலைமறைவாகி விட்டார். இவரிடம்தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன என்பதால், அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்டு அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். அப்போது, நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிப்பது, மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சி.ஆர்.பி.எஃப். கூடுதல் இயக்குனர் அனிஷ் தயாள் சிங் தலைமையில் விசாரணைக் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.

Tags: PM ModiAmit shaParliament attackDiscuss
ShareTweetSendShare
Previous Post

மோடி HAT-TRICK : மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் மோடி!

Next Post

இராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் வேலை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies