நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை... விசாரிக்க குழு அமைப்பு!
Apr 29, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை… விசாரிக்க குழு அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்து, தங்களது ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த புகைக் குண்டுகளில் இருந்து வெளியேறிய மஞ்சள் நிற புகை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது.

மேலும், புகைக் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர், எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவிக் குதித்து அங்கும் இங்கும் ஓடினார். இதனால், எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில், சில எம்.பி.க்கள் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.

மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகைக் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அதேசமயம், இவர்களுடன் வந்திருந்த 2 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. எனினும், இவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 6-வது நபரான லலித் தலைமறைவாகி விட்டார். இவரிடம்தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன என்பதால், அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்டு அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். அப்போது, நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிப்பது, மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சி.ஆர்.பி.எஃப். கூடுதல் இயக்குனர் அனிஷ் தயாள் சிங் தலைமையில் விசாரணைக் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.

Tags: PM ModiAmit shaParliament attackDiscuss
ShareTweetSendShare
Previous Post

மோடி HAT-TRICK : மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் மோடி!

Next Post

இராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் வேலை!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies