நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை... விசாரிக்க குழு அமைப்பு!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற அத்துமீறல்: பிரதமர் ஆலோசனை… விசாரிக்க குழு அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 14, 2023, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த அத்துமீறல் தொடர்பாகவும், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் குழு ஒன்றை அமைத்திருக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்து, தங்களது ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த புகைக் குண்டுகளில் இருந்து வெளியேறிய மஞ்சள் நிற புகை, கண்களில் எரிச்சலை ஏற்படுத்தியது.

மேலும், புகைக் குண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்ட 2 இளைஞர்களில் ஒருவர், எம்.பி.க்கள் அமரும் இருக்கைகள் மீது தாவிக் குதித்து அங்கும் இங்கும் ஓடினார். இதனால், எம்.பி.க்கள் பீதியுடன் உறைந்து நின்ற நிலையில், சில எம்.பி.க்கள் துணிச்சலாக செயல்பட்டு அந்த இளைஞரை பிடித்தனர்.

மற்றொரு இளைஞரை மக்களவை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இச்சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே, நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட 2 பேர் புகைக் குண்டுகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அதேசமயம், இவர்களுடன் வந்திருந்த 2 பேர் தப்பிச் சென்றது தெரியவந்தது. எனினும், இவர்களில் ஒருவரை நேற்று மாலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். 6-வது நபரான லலித் தலைமறைவாகி விட்டார். இவரிடம்தான் முக்கிய ஆவணங்கள் உள்ளன என்பதால், அவரைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உயர்மட்டு அமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். அப்போது, நாடாளுமன்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிப்பது, மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரிக்க தனியாக குழு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் சி.ஆர்.பி.எஃப். கூடுதல் இயக்குனர் அனிஷ் தயாள் சிங் தலைமையில் விசாரணைக் குழுவை உள்துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.

Tags: PM ModiAmit shaParliament attackDiscuss
Share
Tweet
SendShare
Previous Post

மோடி HAT-TRICK : மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் மோடி!

Next Post

இராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் வேலை!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies