பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!
Jul 25, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்தது. 10 சர்வதேச அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் இந்திய அணி தான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் அபாரமாக வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.

நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொண்ட இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்து அபார வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தமுறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், ஆஸ்திரேலியா 6 வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய அணியின் இந்த தோல்வி வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்திய வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஓய்வறையில் இருந்தபோது பாரத பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி-யை கட்டித்தழுவி ஆறுதல் அளித்தார்.

இந்த வீடியோ காட்சியும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. இப்புகைப்படத்தை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முகமது ஷமி பிரதமர் ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு வந்து மிகவும் ஆறுதல் அளித்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தோல்விக்குப் பிறகு மனம் உடைந்து நாங்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தோம்.
ஒரே ஒரு போட்டியால் எங்களது இரண்டு மாத கடின உழைப்பு வீண்போனதுப் போல இருந்தது. அப்போது நாங்கள் யாரும் எதிர்பாராதவிதமாகப் பிரதமர் மோடி அறைக்குள் வந்தார்.

அவர் அறைக்குள் வரப்போகிறார் என்று எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் வருகைக்கு முன்பு வரை நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிடவும் நாங்கள் விரும்பவில்லை.

அந்த சமயத்தில் தான் அவர் வந்தார். எங்கள் அனைவர்க்கும் ஆறுதல் சொன்னார். உண்மையில் அந்த நிமிடத்திற்கு பிறகு தான் நாங்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம், பிறகு தான் சாப்பிடச் சென்றோம். பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது” என்று கூறினார்.

அதேபோல் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

Tags: PM Modiindian cricket teammohammad shami
ShareTweetSendShare
Previous Post

உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் – ஜான் சேம்பர்ஸ் கருத்து!

Next Post

மனித மூளையை பிரதிபலிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies