பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்தது. 10 சர்வதேச அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் இந்திய அணி தான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் அபாரமாக வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.

நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொண்ட இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்து அபார வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தமுறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், ஆஸ்திரேலியா 6 வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய அணியின் இந்த தோல்வி வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்திய வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஓய்வறையில் இருந்தபோது பாரத பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி-யை கட்டித்தழுவி ஆறுதல் அளித்தார்.

இந்த வீடியோ காட்சியும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. இப்புகைப்படத்தை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முகமது ஷமி பிரதமர் ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு வந்து மிகவும் ஆறுதல் அளித்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தோல்விக்குப் பிறகு மனம் உடைந்து நாங்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தோம்.
ஒரே ஒரு போட்டியால் எங்களது இரண்டு மாத கடின உழைப்பு வீண்போனதுப் போல இருந்தது. அப்போது நாங்கள் யாரும் எதிர்பாராதவிதமாகப் பிரதமர் மோடி அறைக்குள் வந்தார்.

அவர் அறைக்குள் வரப்போகிறார் என்று எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் வருகைக்கு முன்பு வரை நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிடவும் நாங்கள் விரும்பவில்லை.

அந்த சமயத்தில் தான் அவர் வந்தார். எங்கள் அனைவர்க்கும் ஆறுதல் சொன்னார். உண்மையில் அந்த நிமிடத்திற்கு பிறகு தான் நாங்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம், பிறகு தான் சாப்பிடச் சென்றோம். பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது” என்று கூறினார்.

அதேபோல் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

Tags: PM Modiindian cricket teammohammad shami
ShareTweetSendShare
Previous Post

உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் – ஜான் சேம்பர்ஸ் கருத்து!

Next Post

மனித மூளையை பிரதிபலிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies