பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!
Sep 9, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்தது. 10 சர்வதேச அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் இந்திய அணி தான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் அபாரமாக வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.

நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொண்ட இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்து அபார வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தமுறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், ஆஸ்திரேலியா 6 வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய அணியின் இந்த தோல்வி வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்திய வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஓய்வறையில் இருந்தபோது பாரத பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி-யை கட்டித்தழுவி ஆறுதல் அளித்தார்.

இந்த வீடியோ காட்சியும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. இப்புகைப்படத்தை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முகமது ஷமி பிரதமர் ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு வந்து மிகவும் ஆறுதல் அளித்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தோல்விக்குப் பிறகு மனம் உடைந்து நாங்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தோம்.
ஒரே ஒரு போட்டியால் எங்களது இரண்டு மாத கடின உழைப்பு வீண்போனதுப் போல இருந்தது. அப்போது நாங்கள் யாரும் எதிர்பாராதவிதமாகப் பிரதமர் மோடி அறைக்குள் வந்தார்.

அவர் அறைக்குள் வரப்போகிறார் என்று எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் வருகைக்கு முன்பு வரை நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிடவும் நாங்கள் விரும்பவில்லை.

அந்த சமயத்தில் தான் அவர் வந்தார். எங்கள் அனைவர்க்கும் ஆறுதல் சொன்னார். உண்மையில் அந்த நிமிடத்திற்கு பிறகு தான் நாங்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம், பிறகு தான் சாப்பிடச் சென்றோம். பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது” என்று கூறினார்.

அதேபோல் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

Tags: PM Modiindian cricket teammohammad shami
ShareTweetSendShare
Previous Post

உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் – ஜான் சேம்பர்ஸ் கருத்து!

Next Post

மனித மூளையை பிரதிபலிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்!

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies