பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!
Apr 29, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரத பிரதமர் மோடி குறித்துப் பேசிய முகமது ஷமி!

Murugesan M by Murugesan M
Dec 15, 2023, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பைத் தோல்விக்குப் பிறகு பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது என்று முகமது ஷமி கூறியுள்ளார்.

ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து முடிந்தது. 10 சர்வதேச அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் இந்திய அணி தான் விளையாடிய லீக் போட்டிகள் அனைத்திலும் அபாரமாக வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது.

நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொண்ட இந்திய அணி இமாலய இலக்கை நிர்ணயித்து அபார வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தமுறை இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில், ஆஸ்திரேலியா 6 வது முறையாக கோப்பையை வென்றது. இந்திய அணியின் இந்த தோல்வி வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்திய வீரர்கள் அனைவரும் சோகத்தில் ஓய்வறையில் இருந்தபோது பாரத பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதிலும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் 24 விக்கெட்களை வீழ்த்திய முகமது ஷமி-யை கட்டித்தழுவி ஆறுதல் அளித்தார்.

இந்த வீடியோ காட்சியும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. இப்புகைப்படத்தை முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது முகமது ஷமி பிரதமர் ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு வந்து மிகவும் ஆறுதல் அளித்ததாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ” தோல்விக்குப் பிறகு மனம் உடைந்து நாங்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தோம்.
ஒரே ஒரு போட்டியால் எங்களது இரண்டு மாத கடின உழைப்பு வீண்போனதுப் போல இருந்தது. அப்போது நாங்கள் யாரும் எதிர்பாராதவிதமாகப் பிரதமர் மோடி அறைக்குள் வந்தார்.

அவர் அறைக்குள் வரப்போகிறார் என்று எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அவர் வருகைக்கு முன்பு வரை நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சாப்பிடவும் நாங்கள் விரும்பவில்லை.

அந்த சமயத்தில் தான் அவர் வந்தார். எங்கள் அனைவர்க்கும் ஆறுதல் சொன்னார். உண்மையில் அந்த நிமிடத்திற்கு பிறகு தான் நாங்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பித்தோம், பிறகு தான் சாப்பிடச் சென்றோம். பிரதமரின் வருகை எங்களுக்கு மிகவும் உதவியது” என்று கூறினார்.

அதேபோல் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.

Tags: PM Modiindian cricket teammohammad shami
ShareTweetSendShare
Previous Post

உலகில் நம்பர் 1 பொருளாதார நாடாக இந்தியா ஜொலிக்கும் – ஜான் சேம்பர்ஸ் கருத்து!

Next Post

மனித மூளையை பிரதிபலிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies