மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!
Aug 15, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபானக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 2,800 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது.

இதன் பிறகு, டெல்லி மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி தொடர்பாக, மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறையும் கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. பின்னர், கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரு அமைப்புகளும் மணீஷ் சிசோடியாவை தனித்தனியாக நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனிடையே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Manish SisodiaCourt CustodyPlea Dismiss
ShareTweetSendShare
Previous Post

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு : முக்கிய தொடர்பு அம்பலம்!

Related News

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies