மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!
Sep 14, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 11:13 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபானக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 2,800 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது.

இதன் பிறகு, டெல்லி மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி தொடர்பாக, மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறையும் கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. பின்னர், கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரு அமைப்புகளும் மணீஷ் சிசோடியாவை தனித்தனியாக நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனிடையே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Manish SisodiaCourt CustodyPlea Dismiss
Share
Tweet
SendShare
Previous Post

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு : முக்கிய தொடர்பு அம்பலம்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies