மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!
Jun 15, 2026, 03:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணீஷ் சிசோடியா மறு ஆய்வு மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் அதிரடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

டெல்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபானக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு 2,800 கோடி ரூபாய்வரை இழப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி கைது செய்தது.

இதன் பிறகு, டெல்லி மதுபான கொள்கையில் நடந்த பண மோசடி தொடர்பாக, மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத் துறையும் கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது. பின்னர், கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரு அமைப்புகளும் மணீஷ் சிசோடியாவை தனித்தனியாக நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும், பண மோசடி வழக்கு விசாரணை தொடர்பாக மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை நீட்டிக்கும்படி அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனிடையே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மறு ஆய்வு மனுக்களையும், அதற்கான ஆதாரங்களையும் கவனமாக ஆய்வு செய்துள்ளோம். எங்கள் கருத்துப்படி அக்டோபர் 30-ம் தேதியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கான எந்த வழக்கும் செய்யப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறது.

Tags: Manish SisodiaCourt CustodyPlea Dismiss
ShareTweetSendShare
Previous Post

சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம்! – பிரதமர் மோடி அஞ்சலி

Next Post

நாடாளுமன்ற புகை குண்டு வீச்சு : முக்கிய தொடர்பு அம்பலம்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies