பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!
Jan 14, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 15, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறியது தீவிர பாதுகாப்புக் குறைபாடு என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் நாட்களில் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். இவர்கள் கோஷமிட்டபடியே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடினர். மேலும், தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த கலர் புகைக் குண்டுகளையும் வீசினர். இவர்களில் ஒருவரை எம்.பி.க்கள் பிடிக்க, மற்றொருவரை அவைப் பாதுகாவலர்கள் பிடித்தனர்.

அதேபோல, இந்த சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், 2 பேர் கோஷமிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர். 4 பேரும் டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதோடு, 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சபாநாயரிடம் இருப்பதால், இதற்கு சபாநாயகர் பொறுப்பேற்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, “நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி நடந்த விவகாரம் தொடர்பாக மக்களவை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 15 – 20 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கீழ் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, இது தொடர்பாக சபாநாயகர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதன் அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பப்படும்.

நாட்டில் பொது சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்துவல் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அரசியலமைப்புச் சபையின் ஆணையாகும். ஆகவே, பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சமூக மற்றும் சட்ட மாற்றமாகும். இதுகுறித்து அனைவரின் கருத்தும் தேவை” என்றார்.

Tags: Parliament attackuniform civil codeAmit sha
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்

Next Post

எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! – தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies