பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!
Oct 26, 2025, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறியது தீவிர பாதுகாப்புக் குறைபாடு என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் நாட்களில் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். இவர்கள் கோஷமிட்டபடியே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடினர். மேலும், தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த கலர் புகைக் குண்டுகளையும் வீசினர். இவர்களில் ஒருவரை எம்.பி.க்கள் பிடிக்க, மற்றொருவரை அவைப் பாதுகாவலர்கள் பிடித்தனர்.

அதேபோல, இந்த சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், 2 பேர் கோஷமிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர். 4 பேரும் டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதோடு, 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சபாநாயரிடம் இருப்பதால், இதற்கு சபாநாயகர் பொறுப்பேற்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, “நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி நடந்த விவகாரம் தொடர்பாக மக்களவை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 15 – 20 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கீழ் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, இது தொடர்பாக சபாநாயகர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதன் அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பப்படும்.

நாட்டில் பொது சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்துவல் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அரசியலமைப்புச் சபையின் ஆணையாகும். ஆகவே, பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சமூக மற்றும் சட்ட மாற்றமாகும். இதுகுறித்து அனைவரின் கருத்தும் தேவை” என்றார்.

Tags: Amit shaParliament attackuniform civil code
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்

Next Post

எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! – தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies