பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!
Jul 25, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பை பலப்படுத்த கடும் நடவடிக்கை: அமித்ஷா!

Web Desk by Web Desk
Dec 15, 2023, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறியது தீவிர பாதுகாப்புக் குறைபாடு என்று கூறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் நாட்களில் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து 2 பேர் குதித்தனர். இவர்கள் கோஷமிட்டபடியே சபாநாயகரின் இருக்கையை நோக்கி ஓடினர். மேலும், தாங்கள் தயாராகக் கொண்டு வந்திருந்த கலர் புகைக் குண்டுகளையும் வீசினர். இவர்களில் ஒருவரை எம்.பி.க்கள் பிடிக்க, மற்றொருவரை அவைப் பாதுகாவலர்கள் பிடித்தனர்.

அதேபோல, இந்த சம்பவம் நிகழ்ந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், 2 பேர் கோஷமிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இவர்கள் இருவரையும் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர். 4 பேரும் டெல்லி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அதோடு, 4 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு சபாநாயரிடம் இருப்பதால், இதற்கு சபாநாயகர் பொறுப்பேற்று விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், புதுடெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித்ஷா, “நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை மீறி நடந்த விவகாரம் தொடர்பாக மக்களவை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக 15 – 20 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதுகாப்பு சபாநாயகரின் கீழ் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, இது தொடர்பாக சபாநாயகர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இதன் அறிக்கை விரைவில் சபாநாயகருக்கு அனுப்பப்படும்.

நாட்டில் பொது சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்துவல் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. பொது சிவில் சட்டம் என்பது நாட்டின் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அரசியலமைப்புச் சபையின் ஆணையாகும். ஆகவே, பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சமூக மற்றும் சட்ட மாற்றமாகும். இதுகுறித்து அனைவரின் கருத்தும் தேவை” என்றார்.

Tags: Parliament attackuniform civil codeAmit sha
ShareTweetSendShare
Previous Post

இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்

Next Post

எண் 7 தோனிக்கு மட்டுமே சொந்தம்! – தோனிக்கு பிசிசிஐ கொடுத்த மரியாதை!

Related News

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!

குளச்சல் அருகே சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

சக்தி திருமகன் படம் – மாறுதோ பாடல் வெளியானது!

நடப்பனஹள்ளி கருப்பசாமி கோயிலில், மிளகாய் யாகமும், பூசாரிக்கு மிளகாய் தூள் கரைசலால் அபிஷேகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies